Wednesday, 30 October 2013

79.
நானும் குற்றாலமும் #1

எங்க குடும்பத்துல ஏதாவது சொன்னா ''ஆமா நீ பெரிய அண்ணாவினு கிண்டல் பண்ணுவாங்க....

இதை என் நண்பர்களுடன் விளையாடும் பொழுது சொன்னால்

''ஙே,..ஙே..''னு முழிப்பார்கள...

எனக்கு அது புரியாம எங்க அப்பாகிட்டயோ இல்லை அத்தைகிட்டயோ கேட்டதாக ஞாபகம்

அதுக்கு அவங்க ''நம்ம குற்றாலம் கோவில்ல அம்பாள் சன்னதில பிள்ளையாருக்கு பக்கத்துல ஒரு போத்தி உண்டு அது நம்ம அப்பாமை வகையரா போத்தி...அவர அண்ணாவினு கூப்பிடுவாளாம்...அவரு பிரம்மச்சாரியாவே வாழ்ந்து சின்ன வயசுல முக்தி அடைஞ்சிட்டாராம்''னு சொன்னாங்க...

அது உண்மையா பொய்யானு தெரியாது ஆனால்,
இப்போ வரைக்கும் எப்போ குற்றாலநாதர் கோவிக்கு போனால் அங்கு குழல்வாய்மொழி அம்பாள் (பேறு செமையா இருக்குல) சன்னதில இருக்குற பிள்ளையாரையும் அந்த போத்தியயும் தவறவிட்டதில்லை...

No comments: