54.
அந்த அழகிய நிமிடங்கள்
உன் கரம் கோர்த்து
சாலையில் நடந்ந தருனங்கள்
நீ அடிக்கடிக்கேட்கும்
இன்னுமென்னடா???
கேள்விகளும்
பதில் சொல்லாமல்
உன் இமை அசையும்
வடிவங்களில்
கருவிழி பார்த்து
அதில் என்னிடமே
ஒன்றுமில்லா
உலகத்தில் நீ
என்னும் சந்தோஷம்
இருக்கையில்
வேறு என்ன
பேசிவிடப்போகிறேன்
சீசரின் மறைவில்
ஆன்டோனியோ பேசியதையா??
சர்ச்சில் பேசியதையா???
புத்தன் போதித்ததையா??
பிகாசோவையா??? ஷெல்லியையா???
கம்பனையா?? கபிலனையா??
அப்படி எதுவுமில்லை...
உன் கரம் தந்த
பரிசுத்தமும் பாதகமும்
உன் கூந்தல் என்
உடலில் தீட்டிய
வர்ணனையும் அதனால்
ஏற்பட்ட மின்னலையும்
உன் உதடருகில்
ஒட்டியிருக்கும் சாக்லேட்
துணுக்குகளைத்தவிர
இப்பிரபஞ்சத்தில் எது
இருக்கிறது.....
உன் கரம் கோர்த்து
சாலையில் நடந்ந தருனங்கள்
நீ அடிக்கடிக்கேட்கும்
இன்னுமென்னடா???
கேள்விகளும்
பதில் சொல்லாமல்
உன் இமை அசையும்
வடிவங்களில்
கருவிழி பார்த்து
அதில் என்னிடமே
ஒன்றுமில்லா
உலகத்தில் நீ
என்னும் சந்தோஷம்
இருக்கையில்
வேறு என்ன
பேசிவிடப்போகிறேன்
சீசரின் மறைவில்
ஆன்டோனியோ பேசியதையா??
சர்ச்சில் பேசியதையா???
புத்தன் போதித்ததையா??
பிகாசோவையா??? ஷெல்லியையா???
கம்பனையா?? கபிலனையா??
அப்படி எதுவுமில்லை...
உன் கரம் தந்த
பரிசுத்தமும் பாதகமும்
உன் கூந்தல் என்
உடலில் தீட்டிய
வர்ணனையும் அதனால்
ஏற்பட்ட மின்னலையும்
உன் உதடருகில்
ஒட்டியிருக்கும் சாக்லேட்
துணுக்குகளைத்தவிர
இப்பிரபஞ்சத்தில் எது
இருக்கிறது.....
No comments:
Post a Comment