Wednesday, 31 October 2012

காதலிக்க நேரமுண்டு 5

சிக்கனும் எழுமிச்சை சாதமும் அவர்களின் பசி போக்க இனிதே ஆரம்பமானது அரட்டை கச்சேரி....

அதுவரை அமைதிப்புயலாய் இருந்த ரகு மொக்கை புயலாக மாறினான்....நண்பர்களின் கலாய்ப்புகளுக்காகவே அவன் பேசுவது போல் லக்ஸாவிற்கு தோன்றியது....

அதுவரை அவனை கொஞ்சம் கொஞ்சம் கலாய்த்து சீண்டிப்பார்த்த லக்ஸா...இன்னும் சீண்டிப்பார்க்க அவளது துறையான பொருளாதாரத்திற்கு பேச்சை மாற்றினாள்....எதற்குள் செல்ல கூடாதென்று  மிதுனும் கார்த்திக்கும் நினைத்தார்களோ..அதனுள் சென்றது பேச்சு....

அதுவரை பொறுமையாய் இருந்த ரகு தன் வாழ்வை தீர்மானிக்கும் பேச்சுபோல் முழு மூச்சாக பேச ஆரம்பித்தான் அவன் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான் என்று அறிந்த அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்..

மகுடிக்கு ஆட்பட்ட பாம்பு போல் இவளும் அவன் பேச்சிற்கு மயங்கி 2 மணி நேரம் போவது தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்....

இரண்டு மணி நேரமாகியும் இவர்கள் பேச்சு ஓயாததால் மற்ற அனைவரும் எரிச்சலுற்று இவர்களை மெரினா அழைத்துச்சென்றனர்...இல்லை இழுத்துச்சென்றனர்...
.
வழியில்...ரகுவின் மொபைலில் ஒரு குறுஞ்செய்தி...
'' ஆர் யூ எக்கானமிக் ஸ்டூடன்ட்?? ''
பார்த்த எண் சட்டென நினைவுக்கு வரவில்லை....
பதில் அனுப்பினான் '' நோ...ஐயாம் இன்ஜினியரிங் ஸ்டூடன்ட் மே ஐ நோ ஹூஸ் நம்பர் இஸ் திஸ்?? ''

இரண்டு நிமிடம் கழித்து ''இட்ஸ் யுவர்ஸ்''என்று பதில் வந்தது...மிகவும் குழம்பியவாரு மிதுனிடம் கேட்டான்...மிதுன் எண்ணை பார்த்து சிரித்தவாரே..'' மடையா இது உன் நம்பர் தான் நீ தான் லக்ஸாட்ட கொடுத்த அதுக்குள்ள மறந்துட்டியா?? '' என்றான்...

என்ன கூறுவதென்று தெரியாமல் அசடு வழிந்தவாரே...வெளியே பார்த்தான் மிகவும் அழகாய் தெரிந்தது கூவம் கடலுடன் சங்கமிக்கும் இடம்

நேரம் வளரும்.............

காதலிக்க நேரமுண்டு 4

தேஜு ,ஐஸூ கார்த்திக் மூவரும் உள்ளே செல்ல...ரகு வாசலில் நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்...மற்ற ஐவரும் சமயல் வேலைகளை ஆரம்பிக்க இவள் மட்டும் அவனை பார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்...

 உள்ளிருந்து தேஜூ '' லக்ஸ்....வீ ஆல் வில் ஈட் நான் வெஜ் ...ஹவ் அபௌட் யூ போத்??? '' என்று உரக்க கத்தினாள்.....

சித்தம் தெளிந்தவாறு...'' வெயிட்...அவன்ட கேட்டு சொல்றேன்'' என்று வாசலுக்கு நடந்தாள்....

வாசலில் அழகாய் எறும்புகள் ஊர்வதை வேடிக்கை பார்த்தவாறு இருந்த ரகுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்...

சடாரென திரும்பிய ரகு இவள் இருப்பதை எதிர்பாராது திடுக்கிட்டான்... பின் இருவரும் கண் இமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருதனர்...ரகு மெல்ல தன் பார்வையை அவள் அங்க அவயங்களில் ஊடுருவச்செய்தான்....

வெட்கம் வந்தவளாக அவனிடம் தெலுங்கில் ''நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள் அசைவம் சாப்பிட மாட்டேன் நீயும் சாப்பிட மாட்டனு அவங்க சொன்னாங்க அதான் என்ன சமைக்கலாம்னு கேட்க வந்தேன்'' என்று அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

இவளின் இந்த 'சாதி' வார்த்தைகளில் எரிச்சலான ரகு ''நானும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவன் தான் ஆனால் எனக்கு அசைவம் பிடிக்காது...மேலும் நீ இனி இந்த சாதி பாசத்தில் என்னுடன் பேசினாள் அதுவே கடைசி பேச்சாக இருக்கும் நம்முள்...இங்கு வாழ்கை முறை வேறு....அங்கு வேறு.....ஐ ஹோப் யூ கேன் அன்டர்ஸ்டான்ட் இட்?? ''என்றான்...

ஒன்றும் புரியாமல் சரி என்பது போல தலையசைத்தாள்....

இவர்களை காணாததால் உள்ளிருந்து வந்த ஐஸூ சற்று செருமியவாரே....''ஹம்...ஹம்.....யப்பா குல்டீஸ் உங்களுக்கு  சமைக்கலாமா?? வேண்டாமா?? சொல்லுங்க..? இல்ல நீங்க ரெண்டுபேரும் சிக்கன் சாப்பிட போறீங்களா?? என்று சிரித்தாள்....

லக்ஸா ''இல்லை நானே வந்து சமைக்கிறேன்...நீங்க முடிக்கட்டும்னு தான் காத்திருந்தேன்....உனக்கு லெமன் ரைஸ் ஓகே வா??'' என்று ரகுவை பார்த்து கேட்டாள்...

மவுனமாய் தலையசைத்து செல்லில் ரிங்க்டோன் கேட்க செல்லை எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்....

உள்ளே சமயலறையில் நண்பர்களின் கலாய்ப்புக்கு நடுவில் அருமையான எலுமிச்சை சாதமும், சிக்கனும் தாயார் ஆனது...


நேரம் வளரும்.........

Tuesday, 30 October 2012

காதலிக்க நேரமுண்டு 3

மறுநாள் காலை லக்ஸா எழுந்த பொழுது ரகு உறங்கிக்கொண்டிருந்தான்...
ஜன்னலோரம் ஜில்லென்ற காற்று மனதிற்கினமாய்...
தன்னை அறியாமல் புன்னகைத்தவாறு காற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தாள்....


உள்ளிருந்து மிதுனும் பவியும் புது காதலர்களின் புத்துணர்ச்சியுடன் வெளி வந்தனர்.....

பவி :  ஹே டியர் ஸ்லெப்ட் வெல்???
 லக்ஸா  : ஹம்ம்ம்....யா.
பவி : வித் ஹிம்...???.என்று சிரித்தாள்...
கண்களால் எரிப்பது போல் பார்த்தாள் லக்ஸா..........

அவ்விடம் சூடாவதை அறிந்த மிதுன் '' ஹே...!!கர்ல்ஸ்...சில்ல்.ரே..முதல்ல ரெண்டுபேரும் குளிங்க சாப்பிட போகலாம்'' என்று கூறி ரகுவை எழுப்ப முயன்றான்.....

அவ்விருவரும் உள்ளே சென்றதும் ஒரு வழியாக ரகுவை எழுப்பினான்...

பின் நால்வரும் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று உணவருந்தினர்...
யாரும் பார்க்காத பொழுது லக்ஸா மட்டும் ரகு சாப்பிடும் அழகை ?! ரசித்தாள்...

கடையிலிருந்து வரும் பொழுதே அன்றைய பொழுது போக்கு முடிவாயிற்று...
சனிக்கிழமை என்பதால் மாலை கடற்கரைக்கு செல்வதென்றும் மதிய உணவு அவர்களே சமைப்பது என்றும் முடிவாயிற்று....

எவ்வித சஞ்சலமும் இல்லாமல் ரகு லக்ஸாவினை கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தான்.....

லக்ஸா வெட்கத்தில் தலை கோதி அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துக்கொண்டிருந்தாள்...அவளை பார்க்க மிதுனுக்குள்ளும் ஏதோ செய்தது....

இதை கவனித்த பவி லக்ஸாவிடம் '' டியர் நீ அழகு தான் அதுக்காக என்னோட ஆள மடக்கிடாத உனக்கு வேணும்னா ஒரு நல்ல பையன நானே காமிக்குறேன் இவனுக பாக்குறத பாரு ?? தே வில் ஜஸ்ட் ஈட் யூ வித் தெயர் ஐஸ்..''  என்று சொல்லி நங்கென்று மிதுனின் தலையில் குட்டினாள்....

பலி மேடையிலிருந்து மீண்டு உயிர் பெற்ற பலிஆடுகள் போல் இருவரும் அசடு வழிந்தனர்...
அப்பொழுது தேஜூ,ஐஸூ கார்த்திக் மூவரும் வந்து வீட்டின் கதவை தட்டினர்...
ரகு எழுந்து கதவை திறக்க சென்றான்...கண் கொட்டாமல் அவன் நடையை கிரகித்துக்கொண்டிருந்தாள் லக்ஸா...

நேரம் வளரும்......

Tuesday, 23 October 2012

மழை-2

மாலை நேரத்தில் மழையை
ரசிக்கிறாய் நீ....

மழையோடு சேர்த்து உன்னையும்
ரசிக்கிறேன் நான்....

'மது'வென்றழைத்து நீ
திரும்பும் முன்...

உன் கரம் கோர்த்து
இடை பிடித்து

உன் முகம் பார்க்கிறேன் நான்
என் மார்பில் முகம் புதைக்கிறாய் நீ...

நான் இழுத்த விசையோ???
நம் இதழின் பசையோ???

ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது....
நம் உயிர் ஒட்டிக்கொள்ள... ♥

மழை 1

அந்தி மாலைப்பொழுதில்
நீயும் நானும்...

ஜன்னலோரமாக உன் மார்பில்
முகம் பதித்து நாம்

மழையை ரசிக்கிறோமா?? இல்லை
மழை நம் காதலை
ரசிக்கிறதா???

Monday, 22 October 2012

வரம்

கடவுளிடம் வரம்
கேட்க சென்றேன்

ஓ கடவுளே!!!
வரம் கொடு.....

அட போடா....
அலட்சிய பதில்...

வெகுன்டெழுந்தேன்...

சீற்றம் உஷ்ணமாயிற்று....

கடவுளும் பயந்தார்....
கண்ணிலும் சோகம்..

என் கோபம் தனிந்தது ஆயினும்
மனம் பொருக்கவில்லை..

என்னாயிற்று? உனக்கும்
பிரச்சனையோ???

ஆம் என்பதுபோல்
ஒரு மவுனம்...

சரி...சொல்..!
இஷ்டமுன்டெங்கிள்...

சற்று விழித்தவாரே...
''ஆக்சுவளி'' என்றான்

சுண்டெலி போல்
சுருங்கிய முகத்துடன்

இன்பமாயினும்,துன்பமாயினும்
என்னை வைத்தே விளையாடுகின்றனர்...

சரி அதற்கு???...

உன் கவிதை போல்,
''நான் நானாக....நீ கடவுளாக''
இருக்க வேண்டும்....

ஓ..!சரி என்றேன்...
நன்றி நான் வருகிறேன் என்றான்..

நீ எங்கு செல்கிறாய் என்றேன்...
இப்பொழுது நீ கடவுள்
நான் மனிதன்

சரி வரம் கேட்க வந்தவனை
வரம் கொடுக்க செய்தாய்

என்ன வரம் வேண்டும் கேள்???
சற்று கர்வத்துடன்

நான் கடவுளடா...!!!!!!!
எனக்கே வரமா??

அப்பாடா...நிம்மதி தந்தாய் கடவுளே...
''நான் நானாக...நீ கடவுளாக..''

மறுநாள் காலை முதல் பக்க செய்தியில்...
''கடவுளை காணவில்லை''.....

Sunday, 14 October 2012

பொம்மை

காலில் கல் பட
கண் கசக்கினாய்...

ஒன்றுமில்லை
சிறு அடி

ஒத்தடம் வைத்தேன்
சரியாயிற்று....

உன் உள்ள பதபதைப்பு

என் வலி மறக்க செய்தது

பொம்மையை பொத்தி
பாதுகாப்பது போல்

என்னை கவனிக்கிறாய்
எனக்கொன்றென்றால் பதறுகிறாய்

உனக்காக நானும் ஆகிறேன்
சிறு பொம்மையாக.... ♥ ♥

மூச்சு

என் இதழோடு
உன் இதழ் சேர்த்து

என் மூச்சுமுட்ட
நீ முத்தமிட்டாய்

மூச்சடங்கி நம்
உயிர் பிரிந்தது

பிரிந்த என்னுயிர்

உன்னுள்ளும்

உன்னுயிர் என்னுள்ளும்
ஒன்றெனக்கலந்தது....

மூச்சுமுட்டும் முத்தங்களால்
மொத்தமாக........♥ ♥♥♥

காதலிக்கிறாயா???

காதலிக்கிறாயா???-ஆம்
எவ்வளவு??!!!!!

சொல்லவேண்டுமோ???
-ஆம்

இப்பிரபஞ்ச புள்ளிக்கும்
உன் ஆன்மாவிற்கான அளவு

காதிலிக்கிறாயாயா??-ஆம்

எவ்வளவு???!!!

சிறு பொட்டளவு மட்டுமே....
புரியவில்லையோ??-ஆம்

இப்பொழுது புரியுமென
கண் இமைத்து...
கரம் சேர்த்து...

புரியவைத்தாய்
உன் செவ்விதழ்களால்.....♥ ♥ ♥ ♥

சிரிப்பு

மின்னலென சிரித்தாய்....
என் உயிர்கண் குருடாயிற்று...

மீண்டும் சிரித்தாய்
என் பார்வை வந்தது...

அது என் பார்வையோ???
அது உன் பார்வையோ???

நீ,நான் என நினைத்தேன்

நான் நீ எனக் கொண்டாயோ??

நான் எனைக் கொன்றாயோ??
நாம் எனக் கொள்வாயோ?? ♥♥♥

Tuesday, 9 October 2012

காது

கவிதைகள் சொல்ல
காதுகள் கேட்டேன்..

நீயும் உன்
காது கொடுத்தாய்...

உன் காதோரம்
சுருளும் முடியும்

உன் காதின்

மடிப்புகளும்...ஆயிரம்

ஆயிரம் கவி
சொல்லுதே....பின்
நான் எதற்கு???

அறியேன்

யாப்பிலக்கணம்
அறியேன்.....

'ல'கர...'ன'கர வேற்றுமையும்
அறியேன்...

சந்திப்பிழை யொற்றும்
அறியேன்...

ஆயினும் கவிஞன்
அடியேன்...

எம் தமிழ் தரும்
தன்னம்பிக்கையால்.....

உன் மேல் உள்ள 
காதலால்.....<3

பசி

பசி என உன் முன் வந்தேன்
தண்ணீர்  கூட இல்லை என்றாய்....

பசி என உன் மடி சாய்ந்தேன்
மாரில் பால் கூட இல்லை என்றாய்...

பசி என உன் முகம் பார்த்தேன்
என் விழி பார்த்து அருகில் வந்தாய்....

என் இதழோடு உன் இதழ் சேர்த்து
உன் எச்சிலெனும் அமிர்தம் தந்தாய்...

பசி எங்கோ  பறந்து போனது
நம் இதழ்கள் மட்டும் இணைந்தே இருந்தது.....

Monday, 8 October 2012

கிறுக்கன்

உன் கண்கள்
உறக்கமின்றி தவிக்கிறது...

உன் உதடு
வரண்டு வாடுகிறது...

உன் உடல்
சோர்வால் வலிக்கிறது...

நான் வந்தால்
இது மாறுமெனக்கூறினாய்...

நானும் வந்தேன்
ஏன் மாறவில்லை???

அடே கிறுக்கா...
மாறுமென்றா கூறினேன்...??

உன் விழிப்பார்வை
போதும் எனக்கு...

உன் இதழ்சுவை
போதும் எனக்கு..

உன் உடல் ஸ்பரிசம்
போதும் எனக்கு....

எனக்கென நீ
இருக்கிறாய் அதுபோதும்

என்றாய்-ஏனோ
நான் எட்டிவந்தேன்...

கடைசிக் குருதி
வெளியேறும் வலியறியாமல்....

கவிதை

கவிதை எழுதலாமென
பேனா எடுத்தேன்...

நீ என்னிடம்
கட்டளையிட்டாய்....

முதல் வரியும்
கடைசி வரியும்
ஒன்றாக இருக்கவேண்டும்,

சரி,அடுத்து??
எரிச்சலாய் கேட்டேன்...

வரிக்கு
இரண்டு வார்த்தை,

மொத்தம்
மூன்று வரி,

சரி
இன்னும்??

முதலும் கடைசியும்
ஒன்றாக இருக்கவேண்டும்,

இன்னும் உண்டோ??
வார்த்தை தடித்து...

  என்னை பற்றி
இருக்கவேண்டும்...

அவ்வளவு தானா??
இறுக்கம் தணிந்து...

என்னழகை புகழக்கூடாது
காதல் கூடாது,

ஹம் இதென்ன பிரமாதம்
மனம் குதூகலித்தது...

கைகள் பேனாவைப்பற்ற
மனம் அவளுள் லயிக்க...

''நீயும் நானும்
.
.
.
.
.
நம் வாழ்க்கை
.
.
.
.
.
நீயும் நானும் ''

கவிதை முடிந்ததென
நினைத்த பொழுது ...

''என்னை கட்டியணைத்து
  நம் இதழ்
  சேர முத்தமிட்டாய்...''

இன்னுமெரு கவிதையாக....

Saturday, 6 October 2012

மச்சம்

உன் மாரென்னும் மலைக்கிடங்கின் வழியே
என் பார்வையென்னும் வெள்ளம் பாய்த்திட்டேன்

கங்கையாய் வழிந்த விழியருவி...
சின்னதொரு மருவினால் அசையாமல்
கட்டுற்று நின்றதுவோ??!!

மருங்குன்றோ?? அதனடியில் என்

உயிர்குடிக்கும் இராட்சதனோ???
கரும் பொட்டோ???

சூராவளியின் நடுவிசையோ??
அண்டத்தின் மையக்கருவோ??
என பலவற்றை உன்னிடம்
கேட்டால்...

இன்னுமிருக்கிறது
காண்பாயோ?? கண்டு மீள்வாயோ??
என பகடி செய்கிறாய்...

உன் சிறுவிழிப்பார்வை போதும்
என் உயிர்குடிக்க...நீ அறிவாய்..
நான் யாரென்று..நாம் யாரென்று....♥ ♥ ♥

Thursday, 4 October 2012

நான்

என்னுள் நான்
நானாக இருப்பதால்
என்னை நானாக தேடுவேன்...
எனக்கு கடவுள் எதற்கு??

என்னுள் நான்
தனியாக நானோ???
நாம் என்று அவனுரைத்தால்

அவன் கடவுளா???

என்னுள் நான்
நாத்தீகன் இல்லை..
ஆத்தீகன் இல்லை..
பகுத்தறிவாளன் இல்லை..

என்னுள் நான்
நானாக நான்...
என்றும் நான்.....
நான் நானாக..............நீ கடவுளாக

நீ கண் சிமிட்டும் நேரம்

நீ கண் சிமிட்டும் நேரம்
கண்களில் முத்தமிடுவேன்....

நீயும் நில்லாமல்
சிமிட்டிக்கொண்டிருக்கிறாய்...

நான் முத்தமிட வேண்டும் என்பதாலா??
இல்லை- என்
முத்தத்தால் வரும் படபடப்பா??? ♥♥♥♥♥

இதுவும் கடந்துபோகும்

இதுவும் கடந்துபோகும்
உன் அழுகையோடு...

இதுவும் மாறிவிடும்
உன் சிரிப்போடு...

இதுவும் சிறப்பாகும்
உன் மகிழ்ச்சியோடு...

எது கடந்தாலும்,

மாறினாலும்,சிறந்தாலும்....

நீ மட்டும் இருப்பாய்
உன் நினைவாய் என்னுள்...

கண்கள்

உன் கண்கள்
வேறெங்கோ பார்க்கிறது...
உன்னை அழைத்தும்
சட்டை செய்யாமல்....

சரி,

உன் கண்களுடன்
நானும் பார்க்கிறேன்
அதன் வழிநோக்கி....
சுற்றிலும் கிட்டவில்லை

அதன் திசை யாதென
குழம்பி நின்றேன்
இருவருக்கும் ஒருபார்வை
தானே எனச்சிரித்தாய்...

நீ.....

தெருவோரம் எவ்வித
சலனமும் இல்லாமல்
நீ....

தெருவின் மொத்த
குப்பையும் உறவுகொள்ளும்
உன் ஆடை.....

அக்கந்தல் ஆடையிலும்
அறியாமல் மறைந்திருக்கும்
உன் மானம்...

ஊரே இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு நேரெதிரில் நாய்கள் துரத்த ஓடும்
நீ....

உனக்கென ஓர் உலகம் உண்டு
ஆயினும் இவ்வுலகின் அடிமை
நீ...

உனக்குள் பேசி உனக்குள் சிரித்து
யாரையோ விரட்டி யாரையோ தேடி அலைகிறாய்
நீ....

தேவர்கள் போல் இம்மண்ணுலகில் ஓர் வாழ்கை
அவ்விண்ணுலகில் ஓர் வாழ்க்கையென வாழ்கிறாய்
நீ...

ஆணாக இருப்பின்
உன் வாழ்கை வாழ்வது
நீ மட்டுமே...

பெண்ணாக இருந்தால்
உன் வாழ்கையை வாழ்வது கயவர்களும்
நீயும்......

கடவுளை அடையும் படியில்
இடறியதால் இவ்வாழ்கை வாழ்கிறாய்
நீ....?????

நீ....நீயாக வாழ்கிறாய்
மனம் கழன்று என்றும் அப்பெயருடன்
நீ......

Monday, 1 October 2012

தமிழ்

தாய் தமிழ் உன்னிடம்
ததிங்கினத்தோம் போடுகிறது..

ஆயினும் உன் தமிழ்
அழகானது.-அதனுள்

சுமந்திருக்கும் நம் காதலையும்
உன் விடாமுயற்சியையும்
நான் எவ்வாறு விட்டுவிடுவது???

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான்
பாண்டிய மாமன்னன்...

தமிழினால் தன் குடும்பம் வளர்க்கின்றனர்
இங்கு சிலர்...

நீ என்ன செய்தாய்??
உன் காதலை வெளிப்படுத்தும்

கருவியாய் உருவித்தாய்...
கருவரையின் சுகம் பெற்றேன்-உன்

தமிழைக்கேட்கும் பொழுது.தமிழினி
மெல்ல வாழும் ♥