Monday, 22 October 2012

வரம்

கடவுளிடம் வரம்
கேட்க சென்றேன்

ஓ கடவுளே!!!
வரம் கொடு.....

அட போடா....
அலட்சிய பதில்...

வெகுன்டெழுந்தேன்...

சீற்றம் உஷ்ணமாயிற்று....

கடவுளும் பயந்தார்....
கண்ணிலும் சோகம்..

என் கோபம் தனிந்தது ஆயினும்
மனம் பொருக்கவில்லை..

என்னாயிற்று? உனக்கும்
பிரச்சனையோ???

ஆம் என்பதுபோல்
ஒரு மவுனம்...

சரி...சொல்..!
இஷ்டமுன்டெங்கிள்...

சற்று விழித்தவாரே...
''ஆக்சுவளி'' என்றான்

சுண்டெலி போல்
சுருங்கிய முகத்துடன்

இன்பமாயினும்,துன்பமாயினும்
என்னை வைத்தே விளையாடுகின்றனர்...

சரி அதற்கு???...

உன் கவிதை போல்,
''நான் நானாக....நீ கடவுளாக''
இருக்க வேண்டும்....

ஓ..!சரி என்றேன்...
நன்றி நான் வருகிறேன் என்றான்..

நீ எங்கு செல்கிறாய் என்றேன்...
இப்பொழுது நீ கடவுள்
நான் மனிதன்

சரி வரம் கேட்க வந்தவனை
வரம் கொடுக்க செய்தாய்

என்ன வரம் வேண்டும் கேள்???
சற்று கர்வத்துடன்

நான் கடவுளடா...!!!!!!!
எனக்கே வரமா??

அப்பாடா...நிம்மதி தந்தாய் கடவுளே...
''நான் நானாக...நீ கடவுளாக..''

மறுநாள் காலை முதல் பக்க செய்தியில்...
''கடவுளை காணவில்லை''.....

No comments: