Friday, 24 August 2012

''சொக்கா சொக்கா சோறுண்டோ??? சோழியன் வந்து கெடுத்தான் டே ''

எல்லோரது வாழ்விலும் கதை கேட்ட அனுபவங்கள் உண்டு...இன்றும்  கேட்டுக்கொண்டிருப்போம் அல்லது சொல்லிக்கொண்டிருப்போம் அதுபோல் சற்று விசித்திரமான கதை என் சிறுவயதில் என் தங்கை சாப்பிடுவதற்காக என் பெரியம்மா கூறுவார்..
இதோ அவர்களி்ன் கதை அவர்களின் பாணியில்
'' ஒரு ஊர்ல ஒரு அம்மாவும் பையனும் வாழ்ந்தாங்களாம்...அவங்க பையனுக்கு என்ன சாப்பாடு கொடுத்தாலும் உடம்புல ஒட்டவே இல்லயாம் அந்த சத்தெல்லாத்தயும் ஒரு பேய் எடுத்துக்கிச்சாம்....அதனால அவங்க அம்மா ஒரு ஜோசியன்ட கூட்டிட்டு போனாங்களாம் அந்த ஜோசியன் நடந்தத சோழி  போட்டு பார்த்துட்டு இனிமே புறவாச கதவை கொண்டிபோட்டுட்டு வீட்டுல விளக்கேத்திட்டு அப்புறமா சோறு கொடுனு சொல்லி அனுப்பினாராம்..அந்த அம்மாவும் அப்படியே செஞ்சாங்களாம் அந்த பேயும் ''சொக்கா சொக்கா சோறுண்டோ???  சோழியன் வந்து கெடுத்தான் டே '' னு வீட்டு பு்றத்துல இருந்து கத்திட்டே போ்யிடுச்சாம்''னு சொல்லி முடிக்கவும் கவளம் சாதம் காலியாகவும் சரியாக இருக்கும் நேற்று மாலை மின்சாரம் இல்லாத பொழுது என் தங்கை மீண்டும் சிறு பிள்ளையாய் கதை கேட்டாள் அதே உற்சாகம் தழும்ப....21 வயதாகியும் ஒல்லி பாச்சாவாய் இருக்கிறாள் ஒரு வேலை அந்த பேய் கதைகேட்ட இவளின் சத்துக்களை உரிஞ்சிருக்குமோ??? என்ற என்னம் என்னுள் வேடிக்கையாக வந்து போனது

Sunday, 19 August 2012

முத்தம் பிடிக்காது

ஒரு சில காரணங்களால் சில சம்பவங்கள் நம் மனதை விட்டு விலகாது...

                   ஹாக்கி விளையாட்டில் கை ஒடிந்து அவளை பார்க்க சென்ற பொழுது அவள் மனம் பட்ட அவஸ்தை இன்றும் நிழலாடுகிறது...அப்பொழுது தான் நாங்கள் இருவரும் தனிமையில் கழித்த இரவு ஒரு தாயாக என்னை கவனித்தாள்..
       இரவில் பெரும்பாலும் உடை அணிவதில்லை அன்றும் அவளே எந்த வித சலனமும் இல்லாமல் என்னருகில் அமர்ந்து தாலாட்டு பாடி உறங்க வைத்தாள்..
        காலை எழுந்த பொழுது என்னருகில் சிறு பிள்ளையைப்போல் உறங்கிக்கொண்டிருந்தாள்..காதலும் காமமும் வேறென புரிய வைத்தவள் அவள்..மிகச்சிறிய விவாதத்தை புதாகரமாக எடுத்துச்சென்று கடைசியில் ஒன்றுமில்லை என முத்தம் கொடுத்து முடிப்பவள்..
     பாதி நாட்கள் அவளது முத்தம் அவள் கண்ணத்தை வீங்க வைத்திருக்கிறது அப்பொழுதெல்லாம் எனக்கு முத்தம் பிடிக்காது சற்று விசித்திரமானவன் நான்....என்னை மனிதனாக்கி உணவு உட்கொள்ளும் முறைகளிலிருந்து உள்ளாடை வாங்குவது வரை கற்றுதந்தவள் அவள்.....
   எல்லா காதலர்களைப்போல நாங்களும் இரவில் நெறுக்கமாக பேசுபவர்கள் தான்..அவள் எனக்கு பல விசயங்களை கற்றுதந்தவள்...இருவரும் ஒன்றாக சங்கமிக்க பல வாய்ப்புகள் இருந்தும் அவளே வெளிப்படையாக கேட்டும் உள்ளுக்குள் ஆசை இருந்தும் நான் நிராகரித்தேன் இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை!!
     பல பெண்களை கடந்து வந்தாலும் அவள் மட்டும் சற்று விசித்திரமாக தெரிகிறாள் இன்றும் தாயாக,காதலியாக,தோழியாக,விரோதியாக,செவிலியாக பல பரிமானங்களைக்கொண்டு பெயரிர்க்கேற்றார் போல் மோகனமானவள்...

Friday, 17 August 2012

இது தானாமா உன் டக்கு ???

இரண்டு வாரங்களுக்கு முன்பு தொல்லியல் மற்றும் மொழியியல் தொடர்பாக துழாவிக்கொண்டிருந்த பொழுது அம்மா என் அருகில் அமர்ந்து பேச்சு கொடுத்தார்கள்...வேலைக்கு செல்லாமல் வெட்டியாக இருப்பதாக அழுத்துக்கொண்டர்...பேச்சு  செல்ல செல்ல என் பள்ளி காலங்களில் வீட்டிற்கு தெரியாமல் மொட்டை மாடி ஓட்டுப்பிறையில் நான் 6,7,8 ஆம் வகுப்புகளில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த ஆய்வகம் அதில் நான் தயார் செய்திருந்த அமிலங்கள் இன்ன பிற குப்பைகள் தொல்லியல் மற்றும் வேதியலில் எனக்கு இருந்த காதல் இன்னும் பலவற்றை நினைவு கூர்ந்து எங்கள் சுயமரியாதைக்காகவும் உன் எதிர்காலதிர்க்காகவும் உன்னை மருத்துவம் அல்லது பொறியியல் படிக்கச் சொன்னோம் வற்புறுத்தாத நிலையிலும் நீ இஷ்டமே இல்லாமல் எங்களுக்காக பொறியியல் படித்தாய் உன்னை உன் போக்குலயே விட்டிருந்தால் இன்னும் நல்லா வந்திருப்பியோ??? என்று கண்களின் ஓரம் வழிந்த நீர்த்துளியை துடைத்து "இது தானாமா உன் டக்கு ???"னு மட்டும் கேட்ராதலனு சொல்லி ஏதோ வெறுமையை போக்கி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார்...இன்றும் அந்த டக்கு மனசுக்குள் பாரமாய் இருப்பதாக உணர்கிறேன் .....

Wednesday, 15 August 2012

சம்பாசனை

மூன்று விதமான சம்பாசனைகளை  நேற்று எதிர் கொண்டேன்
முதல் நண்பன் எல்லா சூப் பையன் தன் காதலி தன் காதலை ஏற்கவில்லை என்று புலம்பினான் அவனை சமாதான படுத்தி fb மூடும் பொழுது ஒரு நண்பி  இரவு  11 மணிக்கு போன் செஞ்சு என் lover என்ன ஏமாத்திட்டு போய்ட்டான் இப்போ இன்னொருத்தி கூட சுத்தறான் கேட்டா நீ அழகா இல்லை எனக்கு நீ வேண்டாம்னு சொல்லிட்டான் எனக்கு செத்திடலாம் போல இருக்குனு ஒரே அழுகை அவளையும் ஒரு வழியா சமாதான படுத்தி உறங்க போன அம்மா  " யாருல அது போன்ல ??? பொட்டபில்லை சகவாசம் அதிகமா வச்சிகிட்ட வாழ்கை வெளங்காது ஒழுங்கா வேலைக்கு போய் உருபுட்ற வழிய பாருன்னு" சொல்றாங்க...இரவு முழுக்க நண்பி கூறிய வார்த்தைகள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன.....