Monday, 6 May 2013

முரண் வசவு

படம் பார்க்க சென்ற
படபடப்பு அடங்குவதற்குள்
படகிலே பயணம்
பயண கலைப்பில்
பசியென பர்சை எடுக்க
பாதி கிழிந்த 5 ரூபாய் நாணயம்
பரவாயில்லை என பாஸ்தாவும்
பர்கறும் கடித்துவிட்டு
பாழாய் போன
ப்லாஸ்மா டீவியில்
பவர் ஸ்டார் படம் பார்த்து
பாதி உறக்கம் தொலைத்து
பரிதவித்த
பகுத்தறிவாளனுக்கு
பாசாங்கு செய்யத்தெரியவில்லை
பாதி உடைந்த
பால் பல்லை
பத்திரமாய்
பரணியில் வைத்து
பாவமாய் பார்த்தால்
பச்சிளம் குழந்தையுடன்
பிச்சைக்காரி....
பின் குறிப்பு ஏதுமில்லாமல்
புறவாசல் வழியே
புஷ்பக விமானத்தில் அல்லக்கை
புடைசூழ புன்னை இளவரசி
பூப்பெய்தி நின்றாள்
புசிக்கின்ற காமுகன் முன்

Saturday, 4 May 2013

மொட்டை

பல முறை யோசித்து சென்ற மாதம் மொட்டை போட உத்தேசித்து சலூன் கடைக்கு போனேன் இந்த பாளாய் போன பொடுகுத்தொல்லையால் மொட்டை போடுங்க அண்ணாச்சினு சொல்லிட்டு உட்கார்ந்தேன் எனக்கு முன்னதாக ஒரு சேட்டுக்குடும்பம் முடிவெட்ட அச்சிறார்கள் ஆளுக்கொரு ஸ்டைல் சொல்லிக்கொண்டிருக்க (எனக்கு அவர்கள் சொன்னதில் பாதி மட்டும் தான் பிடிபட்டது ) நமது சிகை அலங்காரர் அவர் ஸ்டைலில் கரம்பிக்கொண்டிருந்தார் பாவம் அவர்களை பார்பதற்கே பாவமாக இருந்தது...
நானும் இந்த படுபாதகமான கொடுமையை பல வருடங்களாக அனுபவித்து வந்துகொண்டிருக்கிறேன்....இந்த கொடுமை தாளாமல் 5 வகுப்பில் காந்தி போல நானே முடி திருத்திய கதை பள்ளி முழுவதும் பரவியது தனிச்சிறப்பு...இப்பொழுது கூட முகச்சவரன் செய்யத்தெரியாத ஒருவனிடம் போய் முகம் கொடுத்து ஆபீஸில் கலாய்பட்டது நடந்தது....

 பள்ளி முழுப்பரிச்சை லீவு அத்தை வீட்டுக்கு ஓடியாச்சு அங்குதான் நண்பர்கள் அதிகம்...அங்கு கிணத்தடியில் குற்றால மலையின் அழகை இரசித்துக்கொண்டே நீர் இரைத்து குளிப்பது தனி சுகம்...என் அத்தை பெண் என்னை விட 7வயது அதிகம் உள்ளவள் ஒரு நாள் உனக்கு ஜெமினி (விக்ரம்) பட ஸ்டைலில் முடி வெட்டரேனு சொல்லி தலையில் கைவைத்தாள் கடைசியில் பிதாமகன் விக்ரமாக்கிட்டு மாமா வீட்டுக்கு ஓடிட்டா அத்தையோட சுப்ரபாதத்தை கேடக சகிக்காமல் அப்பாக்கு போன் போட்டு அனுமதி வாங்கிட்டு சலூனுக்கு போய் ஒருவழியா மொட்டைய போட்டுட்டு
வீட்டுக்கு வந்தா மாமா ஊர்ல இருந்து வந்து எங்கடா மொட்டை போட்டனு கேட்டார் அவருக்கு தெரிஞ்சா அவர் பொண்ணுங்களுக்கும் ( 8 வயசு அதிகம்) தெரிஞ்சு சீட்டு விளையாடும் போது அசிங்க படுத்திடுவாங்கனு ''அரசன் சலூனை அரசன் கோவில் மொட்டை''னு சொல்ல அத்தையும் நமட்டு சிரிப்புடன் உள்ளே செல்ல ஒரு மிகப்பெரிய வரலாற்றையே உருவாக்கி ஒரு கோவிலை பொதிகை மலையில் எழுப்பி அவரை  நம்ப வைத்த கதை மனதினுள் வர மெல்லிய சிரிப்புடன் சலூன் ரோலிங் சேரில் அமர்ந்து அவன் தலையில் தண்ணீர் தெளிக்க அதே கிணற்றின் குளிர் நீர் தலையில் பட்டதுபோல் ஆனந்தம்.....

Friday, 3 May 2013

பேருந்து தொடங்கியதும் காயத்ரி அக்காவிற்கு
குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு...சன்னலோரம் தலைசாய்த்தேன்
தமிழக அரசு குளிர் சாதன பேருந்து....எப்பொழுதும் போல் இயந்திரமான
சென்னையின் வாசல் வழியே நகர மனம் ஒரு வாராமாக நடந்த விடயங்களை அசைபோடுகின்றது....
பெருங்களத்தூர் வந்ததும் மனம் சிறு பிள்ளையைப்போல் ஆர்பரிக்க
பழைய கல்லூரி நினைவுகள் வந்து செல்கின்றன....
இன்னும் மனதில் அசரீரியாய் அவள் வார்த்தைகள் '' எப்போடா என்ன பஸ்ல கூட்டிட்டுப்போவ??? ஆசையா இருக்கு உன்கூட லாங் டிராவல் பஸ்ல போக...''
பேருந்தில் போகிறவனுக்கு காரின் மீது ஆசை..காரில் செல்பவருக்கு மன நிம்மதி இப்பேருந்திலா?? என்ற குழப்பத்தில் அன்னிச்சையாக சிரித்து அவள் புகைப்படம் அலைபேசியில் எடுத்து அந்த கண்ணங்களை கிள்ளி 'ஜு...ஜு...ஜு...' என்ற பொழுது நடத்துனர் அருகில் வந்தார் எங்க ஸார் போகனுமென்று...
எல்லாம் முடிந்து பேருந்து செங்கல்பட்டை கடக்க கல்லூரியின் வாயில் தேடி மீண்டும் சன்னலருகே முகம் சாய்கிறேன்...A/C வழி நீர் சன்னலில் என் கண்ணீருடன் நேர்கோடாக...

Thursday, 2 May 2013

காதலும் உண்டு கற்பனை இல்லை
காற்றை மட்டும் உண்டு தனிக்க
கானகம் இல்லை நான்
பதின் பருவம் எய்தி
பச்சையாய் காமத்தின் எச்சம்
தனிந்து தமையன் கடித்த மிச்சம்

பிறந்ததும் தப்பில்லை, பிரிவும் தப்பில்லை
வளர்ந்தது மட்டும் தப்பாய் விடின்
நானும் என் காதலும்
நீயும் அறியவில்லை என்னை
நானும் அறியவில்லை உன்னை
நம் காதல் அறிந்தது நம்மை
எம் தந்தை கூற்று நின் உடற்கிறேன்
உன் தந்தை கூற்று பின் உணர்கிறேன்

காந்த தேசத்தில் காதல் மட்டும் தப்பாகும்
கனிந்த உடன் பறிக்க கனியல்ல நான் - நீ
உன்னை மட்டும் சிந்திக்கிறாய் - நான்
என்னை மட்டும் சிந்திக்கிறேன் - விட்டுவிலக
திண்ணை அன்று என் காதல் - உயிர் கொடுக்கும்
தருவாய் நினைத்தேன் - உயிர் கொள்ளியாய்
கொன்று புதைக்கிறது நம்மை

காத்திருக்காதே எனக்காக - என்
காதல் மட்டும் உனக்காக
பெண்ணாய் நான் மாறி எழுதுகிறேன்
பெயரளவில் மட்டும் சொல்லவில்லை
என் அடுத்த உயிரில் உன்னை
காம எச்சத்தின் கருவில் சுமக்க
ஆசையாய் காத்திருப்பேன் கடைசி நாள் வரை
முடிவுரை எழுதத்துடிக்கும் உன் தந்தைக்கும் நன்றி
முடிவில்லா முத்தம் விட்டுச்செல்...<3 <3 <3 <3

மழைத்துளி

உச்சி வெய்யில் வேளையில்
பிச்சி எக்கிப் போக
கண் உறக்கம் தொலைத்து
கடமையே என வேலைக்கு
வந்தேன்

வரும் நொடி தெரியாது
வந்தவுடன் புரியாது
வருவதற்காக ஏங்கும் மனம்
வந்திறங்கியவுடன் வகையறையில்லாமல்
கண்டேன்

காதலில் விழுந்தவனுக்கு
கண்ணீர்த்துளி மட்டும் மிச்சம்
அழுது அழுது வரண்டது கண்கள்
அளவில்லாமல் வாட்டியது துன்பம்
ஆண்டவன் இருக்கின்றான் - என்
அழுகை நிற்பதற்கு வானவில்
வரச்செய்தான்

எனக்காக அழுதன மேகங்கள் கொஞ்சம்
உனக்காக துடிக்கிறது மானங்கெட்ட நெஞ்சம்
கடைசியில் என் அழுகை கரைந்து போக
மழைத்துளியிலும் கடைசித்துளி
கசப்பாய் கண்ணீர்த்துளி.......
 

நின் கனவு என் வரியில்

கனவாய் வந்ததென்றாய்
கனவிலே வந்ததென்றாய்
நினைவாக வேண்டுமென்றாய்
நினைவிலே வேண்டுமென்றாய்
இதோ உன் கனவு
ஏதோ என் வரியில்

முற்றும் தெரிந்த நாரதனாய்
நீ உரைக்க....
முத்தத்தோடு ஆரம்பிக்கிறேன்
நீடா வான்மிகியாய்...

அந்த கள்வன் திருந்த கிட்டிய இராமாயணம்
இந்த கள்(ண)வன் திகட்ட கிட்டிய காதல் மாயம்...
என்றும் உனக்காக...

முதல் கனவு முதலிரவில் தோன்றுமென்பார்
முதல் கனவே நம் முதலிரவாய் தோன்ற
கட்டிய சென்னிரப் பட்டும்
முட்டிய வெட்கமுமாய் நீ வந்தாய்...

முதல் ஸ்பரிசம் எதுவென அரிய
முழு நிலவாய் மகிழ்ந்து நின்றேன்
அருகில் வந்த உன்னை
அருகாமையில் புதுப்பித்து
அவயங்கள் அயராமல்
ஆளப் போகிறேன்....

உன் சேலை நுனி பிடித்திழுக்க
நாணிய நின் முகம் காண
நாளேல்லாம் காத்திருந்தேன்....
சன்னலருகே நின்றிருந்தாய்
அருகில் உள்ள நாற்காலியில்
சன்னமாய் நான் அமர - என்
மடியில் அமர்ந்தாய்.....

முழுச்சேலை விளகவில்லை
முந்தானை விளகக்கண்டேன்...
மாராப்பு மறைய மறவாத
மாரின் காட்சி...பின்
புட்டம் கையில் உரச - பினவாத
புன்னை முத்தம்
மூச்சிரைக்கும் தருவாயில்
மறு முத்தம் என் வாயில்

காமதேவன் காத்திருக்க
கருவரைப்பூத்த  உயிராய் என்
கல்லறைவரையில் காத்திருப்பேன்
தடித்த உன் செவ்விதழ்களை
தடம் மாறாமல் சுவைக்க - நின்
தொடை மட்டும் அடம் பிடிக்கிறது
எடை போட வடம் பூக்கிறது

சில பல பினக்குகள் மட்டும் - நம்
சீரிய காதலில் தோன்றும்
தாலிச்சரடின் வழியே வரைகிறேன்
தவித்து கிடக்கும் என் இதழின் வரைபடம்

இருவருக்கும் ஒரு ஏக்கம்
இருவராய் வாழ்வதா ஒருவராய்
வாழ்வதா என?
இருத்து பி்டித்து உடைகளைந்து
இருக்கமாய் இரசிககிறேன்
உன் இடையிடையில்

உன் ஒற்றை விரல்கள் என் மயிற் பரிக்க
என் கற்றை பற்கள் உன் மார் கிழிக்க
நகமென்னும் நங்கூரமிட்டாய்
நயந்த என் பின் முதுகினில்
எல்லாம் முடிந்து உன்
யோனி சுவைத்த
யோகியாய் நான் அசர
என் மார்பில் முகம் புதைக்கிறாய்
உன் இதழால் மயிரருக்கிறாய்

போதும் என்பேன் போதாதென்பேன்
போதிய போதும் போதாத உன்
கதறும் முத்தம் - என்
உயிர் கொண்டு உணவாய் திண்ணுதடி
உயிரற்ற உடலாய் நானும்
உயிர் கொடுக்கும் கருவில் கலக்க
உரையச்செய்தாய் உன் உப்பிய
கண்ணங்களால் வருடும் பொழுது....<3 <3 <3