Wednesday, 28 November 2012

உன்னை  காண 22 வருடம்
தவம்  இருந்தேன்
23 வருட ஆரம்பத்தில்
 தரிசனம் கொடுத்தாய்

ஆயிரம வரங்கள்
கேட்க இருந்தேன்...
உன் ஆனந்தச்சிரிப்பில்
மறந்தே போனேன்.,..

ஆயிரம் கதை சொல்லும்
உன் அழகிய கண்கள்...

உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை
என நினைத்தேன் உன் உடல் மொழி
எனக்கு ரசவாத வித்தைகள் காட்டியது...

கண்களா அது?? என்னை
அப்படியே காவு கொண்டது..
உன் தலை முடி கோதி
என் மூச்சியில் தீ ஏற்றினாய்..

உன் உதடுகள் இரண்டும்
உயர் ரக மதுவகை
என்னை மயக்கியே வைத்தது..

என் பேச்சில் நடுக்கம்...
என் மூச்சில் காய்சல்
என் பதபதைப்பு சுற்றியிருந்த
அனைவருக்கும் தெரிந்தது...
நீ மட்டும் அறியவில்லையோ??

கோபம் கொள்ளும் போது
உன் உதட்டோரம் வரும்
சிரிப்பில் யுகம் பல கடந்து போனேன்...

ஒரு மணிநேரம் என் எதிரே அமர்ந்து
சொக்க வைத்தாய்...
என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன்
இருக்கப்போகிறேன் என்று
நினைத்தால் உன் காலடியில்
நிப்பேன் சேவகனாக....<3 <3 <3

Saturday, 10 November 2012

தீபாவளி

வருடா வருடம் தீபாவளி எங்களுக்கு  ஒருவாரம் முன்னதாக ஆரம்பித்துவிடும்..வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் திருக்கல்யாண வைபம் மூன்று நாட்களுக்கு முன்னதாக துவங்கும்...

அந்நாட்களில் மட்டும் பள்ளியிலிருந்து அவசரமாக வருவோம்....வீட்டிற்கு வந்ததும் நானும் தங்கையும் ஆளுக்கு ஒரு முழுப்பெட்டி வெடிகளை தனியாக எடுத்து வைத்திருப்போம்....

அம்மா மிலிட்டரி கேண்டினிலிருந்து முந்திய சனிக்கிழமை வாங்கி வந்து விடுவார் அதில் வெடிகள் எனக்கும் மத்தாப்புகள் தங்கைக்கும் அவளுக்கு என்னிடம் இருக்கும் வெடிகளும் வேண்டுமென்பாள் அதனால் சண்டை வரும்...எங்கள் வெடி பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதே ஒரு உலக சாகசம்...

புதையல் காக்கும் பூதம் போல் இருப்போம்....ஒவ்வோரு நாட்களுக்கும் தேவையானதை பிரித்து வைத்து பக்காவாக தயாராவோம்.....திருக்கல்யாணத்திற்கு புதுத்துணி உண்டு அம்மாவோ இல்லை பெரியம்மாவோ வாங்கித்தருவார்கள்...

புது டிரவுசரின் ஒரு பையின் திரி கிள்ளிய பிஜிலி வெடிகளும் மற்றொரு பையில் தீப்பெட்டியும் 25 பைசா ஊதுபத்தி பாக்கெட்டுமாக சப்பரத்திற்கு முன்னாக செல்வோம்.....ஒவ்வொரு தெரு முக்கிலும் அணுகுண்டு அல்லது லக்ஷுமி வெடி உண்டு....

திருக்கல்யாணத்திற்கும் தீபாவளிக்கும் இடையில் உள்ள இரண்டு நாட்களுக்கு கோயில் ஊஞ்சல் ஆதலால் எந்த விசேஷமும் இருக்காது தீபாவளிக்கு முந்திய நாள் மாலை முதல் வரிசையாக வெடி வெடிப்போம் கரண்டு போஸ்ட் ஓட்டை,பாலடைந்த வீட்டின் தாழ்பால் ஓட்டை என எங்கும் எப்பொழுதும் வெடி வைப்போம்

வெடி காலியாகாமல் இருக்க நானும்,தேவா,விஜய்,சந்தோஷ் என வரிசையாக வைப்போம் இரவு 10 மணிக்கு கடைசி வெடி என்னுடையதாக இருக்கும் இல்லை தேவாவினுடையதாக இருக்கும்...

அதன் பின் நள்ளிரவு யார் வெடி வெடிப்பது என்ற போட்டி உண்டு பெரும்பாலும் அம்மாவும் அப்பாவும் மைசூர்பா,பர்ஃபி,முறுக்கு,சீடை,தேங்குழல்,மிச்சர் உக்காரை ( இது மட்டும் சுவைக்க தீபாவளி அன்று தான் தருவார்கள்) என செய்ய உக்கார அவர்களை வேடிக்கை பார்த்து 12 மணிக்கு அவசரமாக ஓடிச்சென்று அவர்களின் வீடருகில் சத்தமாக வெடிக்க 2 அணுகுண்டுகளை இணைத்து வெடிக்க வைத்து யாரும் வரும் முன் வீட்டிற்கு வந்து விடுவேன்...

மறுநாள் காலை எண்ணெய் தேய்த்து குளித்து அப்பாவும் தங்கையும் முதல் சரத்தை வெடிப்பார்கள் அன்று முழுவதும் வெடி தீர்ந்து அவள் மாலை என்னிடம் வெடி கேட்க சண்டை வந்து அவளுக்கு கிப்ட் பாக்ஸ்  கிடைக்கும் இரவு ரிஷபவாகனம் துவங்கும் பொழுதும் முடியும் பொழுதும் கட்டாயமாக எனது சரம் இருக்கும்....

தீபாவளி அன்று யார் வீட்டில் அதிக வெடி போட்டார்கள் எனபதை மாலை மிஞ்சும் குப்பைகளே முடிவு செய்யும்...

வெடிக்காத வெடிகள்,மற்றும் மிஞ்சிய வெடிகளைக்கொண்டு ஒரு ஆராய்சியே நடக்கும் அட்டையில் பொதிப்பது..மண்ணுக்குள் புதைப்பது என கார்த்திகை வரை நீளும்.,..கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் பொழுது மொத்தமாக நாங்களும் எங்கள் ஏவுதளத்தில் ( பழைய டயர் )வெடிப்போம்...

நாங்கள் வைக்கும் ராக்கெட் அல்லது வித்தியாசமான வெடிகளினால் மயிரிலையில் எரிவதிலிருந்து தப்பித்துள்ளன வைக்கோற்போர்களும் அதிகம்....

பத்தாம் வகுப்பில் தீபாவளிக்கடுத்த நாள் பள்ளி வைத்தார்கள் எனபதற்காக பள்ளியில் சரம்,பிஜிலி.ஓலை,மற்றும் கல் வெடி போட்டது அதிகம் கல் வெடி பாறை உடைக்க பயன்படும் என்று அதன் சத்ததினால் 12 வகுப்பு வரை நம்பியிருந்தேன்....

இப்பொழுது தீபாவளி எதற்காகவோ வருகிறது புத்தாடையுடன் போகிறது...

Friday, 9 November 2012

காதலிக்க நேரமுண்டு தீபாவளி சிறப்பு பகுதி

இது தொடர்ச்சி இல்லை சும்மா தீபாவளி ஸ்பொசல்....

ரகுவும் லக்ஸாவும் காதலிக்க துவங்கி பற்பல சண்டைகள் சமாதானங்கள் என மூன்று மாதங்கள் கடந்து முதல் தீபாவளியை கொண்டாடினர்...ரகுவிற்கு எப்போதும் போல் பகீரத பிரயத்தனம் செய்தும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல டிக்கட் கிடைக்கவில்லை..

அதனால் அவ்வருட தீபாவளியை அவன் சென்னையில் உறவினர்களுடன் கழிக்க முடிவுசெய்தான்...20 வயதில் முதல் முறையாக தீபாவளிக்கு வீட்டிற்கு செல்லாமுடியாமல் இருப்பதன் சோகம் அவனை என்னென்னவோ செய்த்து..

அவனுக்காக இவ்வருட தீபாவளியை சென்னையில் கழிக்க திட்டமிட்டு தன் விமான டிக்கட்டை ரத்து செய்தால் லக்ஸா.....

தீபாவளிக்கு முந்திய மாலை....ரகுவின் செல்லிற்கு ஒரு குறுந்தகவல்...
எப்பொழுதும் போல் நண்பர்களின் தீபாவளி வாழ்த்தாய் இருக்குமென எடுத்து பார்த்த பொழுது லக்ஸாவிடமிருந்து....

ஆவலாய் பார்த்தான்... '' ஹே பிட்டா....ஐ கேன்சல்ட் மை டிக்கெட் திஸ் இயர் வி செலிப்ரேட் டிவாளி டுகதர்''

சடாரென வந்த மின்சாரம் போல் இவன் முகம் பிரகாசமானது... '' இஸ் இட் ??'' ஆச்சரியத்துடன் கேட்டான்...இரவு முழுவதும் குறுஞ்செய்தி அரட்டையில் கழித்தனர்...

மறுநாள் காலை சம்பிரதாய தீபாவளி முடித்து நண்பர்களை பார்க்க செல்வதாய் கூறி நண்பனிடம் இரண்டு சினிமா டிக்கெட் எடுக்க சொல்லி...
அவளை  பார்க்க சென்றான்...இளஞ்சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்து ஒரு தேவதை போல் காட்சி தந்தால்...இவனும் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..

பின்னால் இருந்து மிதுன்,கார்த்திக்,தேஜூ,பவி,கீர்த்தி (லக்ஸாவின் கல்லூரி தோழி) எல்லோரும் ஒன்றாய் '' ஹேப்பி தீபாவளி'' என்று காது கிழியும் அளவிற்கு கத்தினர்...

சற்று அதிர்ச்சியுற்ற ரகு பின் சுதாரித்தவாறு கார்த்திக்கிடம் ''நீ புனே போகல?? உன்னை நாங்க தானே வழி அனுப்பி வைச்சோம் நீ எப்படி இங்க??'' என்று ஆச்சரியம் பொங்க கேட்டான்....

ஆமாம் போனேன் நேத்து ஈவனிங் எல்லாரும் உனக்கு சர்பிரைஸ் தரலாம்னு
சொன்னாங்க கிளம்பி வந்துட்டேன் என்றான்....பின் லக்ஸா அவனருகில் நெருங்கி அவன் தோளில் கைவைத்து முத்தம் கொடுப்பதுபோல் நெருங்கி வந்தாள்...

உடல் கூச கண்கள் மூடி அவளை தல்ல முயன்றான்....அவள் சட்டென மிதுனிடமிருந்து பையை வாங்கி ''ஹேப்பி தீபாவளி'' என புத்தாடை நீட்டினாள்,....அதில் இரண்டு செட் ஆடைகள் இருந்தது .....

ஒன்றும் புரியாமல் வினாவினான்...ஒன்று மிதுன் கொடுத்தது...இன்னொன்று
லக்ஸா கொடுத்தது....பின் அனைவரும் பட்டாசு வெடித்து படம் பார்த்து ஒரு நாள் போனது தெரியவில்லை...மாலை அவனது உறவினர்கள் அழைத்ததும் தான் நினைவுக்கு வந்தது...அவன் அங்கு வருகிறேன் என சொன்னது,,,,