Friday, 9 November 2012

காதலிக்க நேரமுண்டு தீபாவளி சிறப்பு பகுதி

இது தொடர்ச்சி இல்லை சும்மா தீபாவளி ஸ்பொசல்....

ரகுவும் லக்ஸாவும் காதலிக்க துவங்கி பற்பல சண்டைகள் சமாதானங்கள் என மூன்று மாதங்கள் கடந்து முதல் தீபாவளியை கொண்டாடினர்...ரகுவிற்கு எப்போதும் போல் பகீரத பிரயத்தனம் செய்தும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல டிக்கட் கிடைக்கவில்லை..

அதனால் அவ்வருட தீபாவளியை அவன் சென்னையில் உறவினர்களுடன் கழிக்க முடிவுசெய்தான்...20 வயதில் முதல் முறையாக தீபாவளிக்கு வீட்டிற்கு செல்லாமுடியாமல் இருப்பதன் சோகம் அவனை என்னென்னவோ செய்த்து..

அவனுக்காக இவ்வருட தீபாவளியை சென்னையில் கழிக்க திட்டமிட்டு தன் விமான டிக்கட்டை ரத்து செய்தால் லக்ஸா.....

தீபாவளிக்கு முந்திய மாலை....ரகுவின் செல்லிற்கு ஒரு குறுந்தகவல்...
எப்பொழுதும் போல் நண்பர்களின் தீபாவளி வாழ்த்தாய் இருக்குமென எடுத்து பார்த்த பொழுது லக்ஸாவிடமிருந்து....

ஆவலாய் பார்த்தான்... '' ஹே பிட்டா....ஐ கேன்சல்ட் மை டிக்கெட் திஸ் இயர் வி செலிப்ரேட் டிவாளி டுகதர்''

சடாரென வந்த மின்சாரம் போல் இவன் முகம் பிரகாசமானது... '' இஸ் இட் ??'' ஆச்சரியத்துடன் கேட்டான்...இரவு முழுவதும் குறுஞ்செய்தி அரட்டையில் கழித்தனர்...

மறுநாள் காலை சம்பிரதாய தீபாவளி முடித்து நண்பர்களை பார்க்க செல்வதாய் கூறி நண்பனிடம் இரண்டு சினிமா டிக்கெட் எடுக்க சொல்லி...
அவளை  பார்க்க சென்றான்...இளஞ்சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்து ஒரு தேவதை போல் காட்சி தந்தால்...இவனும் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..

பின்னால் இருந்து மிதுன்,கார்த்திக்,தேஜூ,பவி,கீர்த்தி (லக்ஸாவின் கல்லூரி தோழி) எல்லோரும் ஒன்றாய் '' ஹேப்பி தீபாவளி'' என்று காது கிழியும் அளவிற்கு கத்தினர்...

சற்று அதிர்ச்சியுற்ற ரகு பின் சுதாரித்தவாறு கார்த்திக்கிடம் ''நீ புனே போகல?? உன்னை நாங்க தானே வழி அனுப்பி வைச்சோம் நீ எப்படி இங்க??'' என்று ஆச்சரியம் பொங்க கேட்டான்....

ஆமாம் போனேன் நேத்து ஈவனிங் எல்லாரும் உனக்கு சர்பிரைஸ் தரலாம்னு
சொன்னாங்க கிளம்பி வந்துட்டேன் என்றான்....பின் லக்ஸா அவனருகில் நெருங்கி அவன் தோளில் கைவைத்து முத்தம் கொடுப்பதுபோல் நெருங்கி வந்தாள்...

உடல் கூச கண்கள் மூடி அவளை தல்ல முயன்றான்....அவள் சட்டென மிதுனிடமிருந்து பையை வாங்கி ''ஹேப்பி தீபாவளி'' என புத்தாடை நீட்டினாள்,....அதில் இரண்டு செட் ஆடைகள் இருந்தது .....

ஒன்றும் புரியாமல் வினாவினான்...ஒன்று மிதுன் கொடுத்தது...இன்னொன்று
லக்ஸா கொடுத்தது....பின் அனைவரும் பட்டாசு வெடித்து படம் பார்த்து ஒரு நாள் போனது தெரியவில்லை...மாலை அவனது உறவினர்கள் அழைத்ததும் தான் நினைவுக்கு வந்தது...அவன் அங்கு வருகிறேன் என சொன்னது,,,,

No comments: