Wednesday, 28 November 2012

உன்னை  காண 22 வருடம்
தவம்  இருந்தேன்
23 வருட ஆரம்பத்தில்
 தரிசனம் கொடுத்தாய்

ஆயிரம வரங்கள்
கேட்க இருந்தேன்...
உன் ஆனந்தச்சிரிப்பில்
மறந்தே போனேன்.,..

ஆயிரம் கதை சொல்லும்
உன் அழகிய கண்கள்...

உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை
என நினைத்தேன் உன் உடல் மொழி
எனக்கு ரசவாத வித்தைகள் காட்டியது...

கண்களா அது?? என்னை
அப்படியே காவு கொண்டது..
உன் தலை முடி கோதி
என் மூச்சியில் தீ ஏற்றினாய்..

உன் உதடுகள் இரண்டும்
உயர் ரக மதுவகை
என்னை மயக்கியே வைத்தது..

என் பேச்சில் நடுக்கம்...
என் மூச்சில் காய்சல்
என் பதபதைப்பு சுற்றியிருந்த
அனைவருக்கும் தெரிந்தது...
நீ மட்டும் அறியவில்லையோ??

கோபம் கொள்ளும் போது
உன் உதட்டோரம் வரும்
சிரிப்பில் யுகம் பல கடந்து போனேன்...

ஒரு மணிநேரம் என் எதிரே அமர்ந்து
சொக்க வைத்தாய்...
என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன்
இருக்கப்போகிறேன் என்று
நினைத்தால் உன் காலடியில்
நிப்பேன் சேவகனாக....<3 <3 <3

No comments: