Monday, 10 December 2012

காதல்

எட்டிச்செல்ல வானமிருந்தும்...
கட்டிப்புரள பூமியிருந்தும்....
கடந்து செல்ல கடலிருந்தும்..
.
உலகம் முழுதும் சொந்தங்களிருந்தும்...
ஏனோ தனித்து விட்டது போல்
மனபிறழ்வு......

தனியே வந்து
தவம் கலைப்பாயோ?? சகியே.
தனித்துவிட்டு
தடுமாறச்செய்வாயோ???

நீ மட்டும் உலகமென்றிருந்தேன்...
உறங்காமல் தவித்திருந்தேன்...
உளறாதே கிறுக்கா...
உன்னுள் நானிருக்க...
என்னவன் நீயன்றோ???

என ஏகாந்தமாய் உன்
முத்தங்கள் பொழிவாயோ???
உன் முகத்திரை கிழித்து
காதல் மழையில் நனைப்பாயோ?? <3 <3 <3

No comments: