Friday, 29 March 2013

கிருஷ்ண மாயம் 2



ஆயர் பாடியில் நீ உறங்க
ஆத் மீகனாய் நான் இருக்க
பால நடை பயின்றாய் - நீ
அஷ்டமித்த திரு நாளில்
அடி எடுத்து வைத்தான்
கோபாலனாய் என் வீட்டில்.....

என்றும் தரும் பேருவகை நின்
இமை சிரிப்பில் கண்டுவிட்டேன்
எனக்காக நீ மட்டும்
ராதையாய் தனித்திருந்தாய்
பல் துலக்கா பல முத்தம்
தந்திருக்கிறேன் உன் படத்தில்

காற்றிலாடும் நின் படம்
காணவேண்டும் ஒரு தடம்
கண நேரத்தில் தோன்றும் மின்னல் - நீ
கை ஆட்டி அழைக்கும் பொழுது
கண் உறக்கம் தொலைத்தேன் கண்ணா..!!

சில நாள் தோன்றியது மனதில்
கோபி கன்னிகையாய் பிறக்கலாமென்று
சில நூறு முத்தம் தந்துவிட்டேன்
கோவர்த்தனா திருப்தி இல்லை...!!

மயிற் பீரி சூடிக்கொண்டாய்
மனத்திலே வருடல் தந்தாய்
முகிலவா நின் முகம் மட்டும் போதும்
முயலா பல கவி பிறக்கும் மனதில்...!!

நீல வண்ண கண்ணா நின்னை
நீங்கி நான் இல்லை- நாமும் இல்லை
ஆணாய் ஏன் பிறந்தேன் உன் அடி சேர
ஆசை இருக்காதோ???

அழுது புலம்பினேன் ஆண்டவா நீ மட்டும்
ஆனந்த தாண்டவம் புரிகின்றாய் காளிங்கா...
அடியார்க்கு அடியனே முதல்
அடி எடுத்து வைத்தேன் - என்
ஆதி காதல் நானும் சொல்ல....

முற்றும் துறந்த முழு சிரிப்பு
மூவுலகம் அளந்த வாமனா - நின்
மூச்சிடையில் முழுவதுமாய்
உயிர் வாழ்கிறேன்....

அள்ளி அனைத்து கோலமிடு
என் கோவம் தனிய முத்தமிடு
என் வாழ்வு மொத்தம் நீ அன்றோ??
ஜகனாதா மோகனமாய் வந்த
நிர்மல ஹரினி(ன்) மாயம்
மதுவாய் மயக்குது கொஞ்சம்......

இன்னும் என்னவெல்லாம் வேடம் புரிவாய்??
என்னை உன்னுள் ஆள்வதற்கு
மீண்டும் மௌனம் பூக்காதே
மனம் கொத்தி போனது போதும்
என்னுள் உன்னை எடுத்துக்கொள் - இவ்
வார்த்தைப் பிழையாய் என்றும்
என் வாழ்க்கைப் பிழை...கிருஷ்ண.....கிருஷ்ணா.......

Thursday, 28 March 2013

காதலியே

அடி கண்மணி நீ தூங்கினால்
உன் கனவாகிறேன்
அடி பொன்மணி நீ தீண்டினால்
நான் தீயாகிறேன்

நீ பேசும் வார்த்தை மட்டும் இங்கு
நீங்கிச்சென்றதடி
நீ கண் சிமிட்டிப்போகும் நேரம்
காதல் பிறக்குதடி

உன் வாசல் தேடி வந்தேன்
என் நினைவும் போகவில்லை
உன் ஸ்பரிசம் தேடிச்சென்றேன்
என் பூவும் பூக்கவில்லை

உன் விழியருகில் நானிருந்தால்
என் வாழ்வும் போதவில்லை
இந்த மாயம் போதும் என்றேன்
என் உணர்ச்சித்தீரவில்லை


இனி என்ன நான் செய்வேன்
என் காதலியே....???
ஒரு வார்த்தை பேசிப்போடி
அடி பூங்குயிலே....

இந்த கள்ளச்சிரிப்போரம்
என்னை நான் இழந்தேன்
நீ செல்லம் கொஞ்சிப்போனால்
என் உயிரை நான் தருவேன்

என் பூவை தேடி வந்தேன் அது
தொலைந்து போனதடி
தொலைந்த இடம் தேடி அழைந்தேன்
உன் இதழில் பூக்குதடி
பல பூக்கள் வந்து செல்லும்
பொன் வசந்தம் நீயடி.............. <3 <3<3

மணம்

இருவருக்கும் முதல் காதல்
இயல்பாய் வந்த காதல்
இன்னொரு முறை வரா காதல்
வாழ்வின் அர்த்தம் தந்த காதல்
வாகை சூட போகும் காதல்
வண்ண கிளி நீ தந்த காதல்

காதலின் அர்த்தம் நீ தந்தது
கஸ்டம் இப்பொழுது நான் தருவது
வெண்ணிலவே உன்னுடன் இருந்தபொழுது
விடியாமல் செல்லும் இரவின் சொர்கம்
வேண்டா வெறுப்பாய் நான் வந்த வேலை
விடியும் பொழுது வருகிறேன் நாளை

உன்னுடன் இருக்கும் நேரம் குறைவு-அதனால்
உண்டான இறுக்கம் அதிகம்
உடல் மட்டும் இங்குள்ளது
உயிர் உன்னை சுமக்கின்றது- இறுதிவரை
உடனிருப்பாயென நம்பித்தரும் வேதனை இது
உறங்காமல் உழைக்கிறேன் இன்று
உன்னுடன் நலமாய் வாழ நாளை

புரிந்து கொண்டு பூக்கள் தேடு
பொன் கயிற்றில் மாலை கோரு
பொன்னான நாளில் நானும்
உன் கழுத்தில் மாலை இட
புதுமணத்தம்பதியராய் நாமும்
புது வாழ்வு வாழ்வதற்கு....

காதல்

முத்தத்தோடு வன்முறை செய்தாய்
முகம் பார்க்க திரும்பிச்சென்றாய்
வானம் மட்டும் இங்குள்ளது அதன்
வண்ணம் யாவும் விலகிச்சென்றது

வண்ணப்பூவில் தேன் உள்ளது-அதை
வாங்கிச்செல்ல மான் வந்தது
வெளிச்சம் தர விளக்குகள் வேண்டும்
வேண்டி வர வரங்களும் வேண்டும்

வெண்ணிலா உன் முகம் காண
வெட்றுடம்பாய் வேர்த்து அலைகிறேன்
விழியிரண்டும் வியர்வை சிந்த.
முதல் ரத்தம் சிந்திய பொழுது
மனதிலே தெரிந்தது நான்தானோ???

முதல் முத்தம் தந்து செல்ல
மூக்கின் கீழே இதழ்களுமுண்டு
குளிர் காற்றும் இங்கு சுடுகின்றது
கால்கள் இடறி தவழ்கின்றது

ஏன் என்னை  கொன்று புதைக்கிறாய்???
காமம் என்னும் படுகுழியில்
காதல் என்னும் கல்லறையில்....

Sunday, 24 March 2013

அலை

கடற்கரை எங்கும் சுற்றி திரிகிறேன்
கண் மறக்கும் நம் நினைவுகள் தேடி
கடலலையில் எழுதிவிட்டுவந்தேன்
உன் பெயரோடு என் பெயரையும்
கரை மணல் அதனை புதைத்துசென்றதடி
புதையிடம் எங்கும் தோண்டிப்பார்த்தேன்
அலை தரும் எச்சமாய் காதல்.
வலையருந்து சென்ற மீனாய் துள்ளும்
உன் கோபமும் என் கோபமும்....<3

தமிழா

கடவுளும் வந்தான் இலங்கை தென்னவன்
யாழிசை மீட்சியில்
கடல் கடந்து  வாணிபம் செய்ய தென்டியாய்
படைத்தான் ராஜ ராஜன்....

அசோகனது வாரிசுகளாம்
சிற்றாது சீர்தூக்கி எம் மக்காள்
இன்னலுரச்செய்தனர்

பால சந்திரனது உயிரும் போன பின்னர்
பரிதவித்தது எம் தூண்கள்
அரியனையேரும் ஆவா இவற்கில்லை
பேருந்தில் ஆடிபாடும் எம்
மாணுவற்கு.......

மாவீரன் என்றுரைக்க மாட்டேன்
மானுடன் என்றுரைக்க மாட்டேன்
அவர் தம்  அரிய செய்கையால்

ஈழம் மட்டும் தீர்வன்று..
ஈன்ற தாய்க்கும் பேருவகை
இயலாமையில் தவிக்கும் வரியோருக்கும்
ஈது விடின்

எமது பரதம் முரசோடிசைந்த
எட்டபர்கள் எக்காளமிடும்
ஏட்டுச்சுரைக்காயை மாற்றியமை

எட்டிப்பிடிக்க வானமுண்டு
ஆயினும் தமிழர்க்கு மானமுண்டு...
புதுமை பல புரிந்த போதும்
பழமை மறவாதே....

நயவஞ்சக நரி கண்டு
நகையாத வரிப்புலி நீயன்று....
வதை படும் தமிழர் தம்
வாகை சூடு சிங்களவனை
நின் மதியால்...

தமிழருக்கு ஓர் பெயருண்டு
அறவ நாட்டார் என
அறம் வளர்த்து போர் செய்
அயலவர் அதிரும் வண்ணம்....




Sunday, 17 March 2013

பார்வை

கள்ள பார்வை பார்த்தாய்
கட்டி முத்தம் சேர்த்தாய்...
இன்னுமென்னடி கோபம்???
இன்னொரு முறை கொன்றுவிடு
இருந்தாளும் உன் விழிகளால்... ♥ ♥ ♥

கிருஷ்ண மாயம்

ஆழி மலை கள்ளனவன்
ஆயர்தம் மாயனவன்
காலிங்க நர்தனம்
கண் மறந்து புவி சொக்க
பெண் மறப்பாள்
காண்பவனை...!!!!

காரிருள் கரிய மேகம்
யமுனை கரையோரம்
நின் கானம்
நீர் எடுத்து நிலம் கடந்து
வைக்கின்றேன் காலடியை
நின் புல்லாங்குழல் கானம்


பிருந்தாவனத்திலொரு ஸ்வப்னம்
நின் மடிசாய்ந்து கிடக்கிறேன்
நீயே கல்லாய் நானுறங்க
களவனைப்போல் காதல் பறிக்கிறாய்



பறிப்பது கள்வனன்று கண்ணனல்லவோ??
கள் அருந்திக்கிடப்பதுபோல் ஒரு மயக்கம்
பரிமேல் முகிலன் நின் கண்ணம்
பதிக்க முதல் முத்தங்கள்

ராதாவுமல்ல,மீராவுமல்ல
ஆயர்பாடி கோபியருமல்ல
நின்னுடன் ஆடிப்பாட
ஆண்டாளுமல்ல சூடிக்கொடுக்க
ஆருயிர் கொள்ளும் நின் மௌன
மொழி வேண்டி நின்றேன்
நானும் மௌனியாக என்னுள்
நீயும் மௌலியாக....!!!!!!

Sunday, 10 March 2013

கவி-3

நலமாய் சிறு புன்னகை
நீ மட்டும் சிந்திவிட்டு சென்றாய்

நாட்கள் நகர நடுநிசியும் பனித்தது
விலங்கிட்ட விழியில் வியர்வை செய்யும்
வேலை அதிகம்

வென்னிற மேகங்கள் யாவும்
வெளிச்சமின்றி அழைகிறது-உன்
விழி சிமிட்டளுக்காக...

கடற்கரையெங்கும் கடந்து செல்வேன்
கடலலையில் கால் பதிக்காமல்
நகரத்தின் நிசப்தமும் கசக்கிறதடி
நின் குரல் கேளாவிடின்


ஒவ்வொரு விநாடியும் வெண்சாமரம்
வீசும் உன் கார்கூந்தல் என் முகத்திரையில்

நண்பர்களுக்கும் எழுதுகின்றேன்-கவிதைகள்
நயம் பல  கலந்து செய்தும்
நின் முகம் தேடி திசையெங்கும் திரிகிறேன்....
என் மொழி எனக்கே மறந்து போகும்
உன் சினுங்களில்....


வார்த்தைகள் தேடி அலைகிறேன்
என் கவி சேர்க்க-ஏனோ
உன் முகம் மட்டும்
தெரிகிறது -என்
ஒவ்வொரு எழுத்துகளிலும்

இந்த கவியும் சிறந்ததல்ல
இன் முத்தம் கிட்டும் வரை
காதல் மட்டும் கருப்பொருளல்ல
சில பல எழுத்துக்களும்
சிறந்ததாய் விழும்
உன் விரல் தரும் ஸ்பரிசத்தால்....




கடல் வீடு

கடற்கரையில் வீடு கட்டினேன்-உன்
கரம் பிடிக்க...கடல் மணற் சேர்த்து
பிசைந்து அழகாய் கட்டுவேன்
மணற்வீடும் உன் கழுத்தில்
மாங்கள்யமும்.....

கடலலை எங்கும் உன்தன் வாசம்
காணாமற் போகிறேன்
கடும் நுரைகளாய் நின்
கண்விழிபார்வையினில்....<3

கவி2

இடித்தாய் மெல்ல சிரித்தாய்
சிறு புன்னகையில் விளித்தாய்.-உன்
இடைபிடித்து இதழ் பழிக்க ஆசை
நீ நகங்கடிக்கும் நிடையில்
தொலைந்து போகிறேன்
நான்...

என் நெஞ்சோடு உன் விரல்
தழுவும் ஸ்பரிசம்-விதமாய்
நான் இழுக்க
விருட்டென நீ தடுக்க

உன் மார்பில் முகம் புதைக்கிறேன்
என் தலைகோதி முத்தமிட்டாய்
உன் முத்ததின் சத்தம் அடங்குவதற்குள்
என் முழுவுயிரையும் பறித்தாய்...

தேவதை என்று நினைத்தேன் நான்
தேன் வண்டு முகர்வது போல்
பதம் பார்த்தாய் உன் பார்வையில்
பாதி வழியில் பதம் தெரியாமல்
பரிதவிக்கிறேன் பாசாங்கு செய்யாமல்
பண்பாய் கூறு போடு உன் கூரிய
நகங்களால்.... <3 <3 <3

கவி

என்னருகில் நீ நின்றாய்...
உன் முகம் மறைத்து சிரிக்கிறாய்

இடையென்னும் வளைவுகளில்
வண்ண கவியாட்டம்

வடிமறைக்கும் கார்கூந்தல்...
காற்றில் முத்தமிடும் காதணிகள்

சில்லோசையாய் உன்
சிரிப்பும் பேச்சும்

குந்தம் பொதிந்த
உன் பின் பிடிப்பு

யாவும் சொல்லும் நீ
யாழினை என....

 யாரும் சொல்லாக் கவிதை
நீ யாக்கை திரிபும்

காதல் பினை
எனக்கான வினை <3 <3 <3 <3





Saturday, 2 March 2013

காதலிக்க நேரமுண்டு - 6

 கடற்கரையில் கால் பதித்த உடன் சிறு பிள்ளை போல சிலாகித்து கடலலை  காலில் உரச விளையாடி மகிழ்ந்தனர் அப்பொழுது மிதுன் ஒரு போட்டி வைத்தான் யார் குழுவாய் மணற்வீடு கட்டுவதென்று....

மிதுனும் ரகுவும் ஒரு குழுவாகவும் பவி லக்ஸா ஒரு குழுவாகவும் பிரிந்து கட்ட துவங்கினர்...பெண்கள் இருவரும் அழகாய் கட்ட இவர்களுக்குள் தோற்றுவிடுவோம் என்ற எண்ணம் மேலோங்கியது....ஒரு சிறிய பிளான் அன்றைய பொழுதை அழகாய் மாற்றியது...

ரகு ; மச்சி இப்படியே போச்சுனா நாம தோத்துட போறோம் டா....
மிதுன் ; அதான் ஏன்ட ஒரு பிளான் இருக்கு டா...
ரகு ; என்ன???!!!!
மிதுன் ; நீ அவங்க்கிட்ட பேச்சு கொடு
ரகு ஒன்றும் புரியாதவனாய் அவர்களிடம் சென்றான்...அவர்களிருவரும் அவன் வருவதை சட்டை செய்யாமல் வீடு கட்டுவதிலேயே குறியாய் இருந்தனர்...

மிதுன் ரகுவை அழைக்க ரகு என்ன என்று கேட்டான்.....
மிதுன் கோவமாய் வருவது போல் ரகுவை அவர்கள் வீட்டின் மேலே தள்ளி விட்டான்...
வீடு உடைந்த அதிர்ச்சியில் அவர்களிருவரும் ஆளுக்கொருவரை அடிக்க அடிதாங்க முடியாமல் ரகு லக்ஸாவை தள்ளிவிட லக்ஸா முழுவதுமாய் கடல் நீரில் நனைந்தால் அருகில் மிதுனும் பவியும் கடலலை தம்மை மறந்து விளையாடிக்கொண்டிருந்தனர் காதல் சொட்ட...

போட்டியில் ரகுவும் மிதுனும் கட்டிய வீட்டை இடிக்க  லக்ஸா செல்ல அவளை தடுக்கும் நோக்கத்துடன் ரகு பிடிக்க இருவரும் இனம் புரியாமல் சண்டையிட்டனர் செல்லமாக.....கடைசியில் லக்ஸா அவன்பிடியிலிருந்து விலக அந்த வீடும் அடித்துச்சென்றது கடலலையில்....

கடற்கரையில் சில மணிநேரங்கள் போனது தெரியாமல் அனைவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்....

அனைவரின் வயிற்றிலும் பசிப்பெருமான் நடனமாடத்துவங்க சற்று நிதானித்து காரை நோக்கி நடந்தனர்...ஈர உடையெங்கும் மணலொட்ட ஒருவருக்கொருவர் வண்ணமாய் வடிந்த நீரினை துடைத்து காரில் அமர்ந்து இருப்பதை பகிர்ந்தனர்..

லக்ஸாவின் இயல்பு அவளை ரகுவை சுற்ற வைத்தது...அவனோ அவளின் அவயங்களில் கண்பதிக்கிறான்....மீண்டும் ஒரு நாள் விசித்திரமாக முடிந்தது..
அவனும் அவளும் நேரம் கிடைக்க காதல் வளர சில காலங்கள் அமைதியாய் திரிந்தது.....