Wednesday, 31 October 2012

காதலிக்க நேரமுண்டு 5

சிக்கனும் எழுமிச்சை சாதமும் அவர்களின் பசி போக்க இனிதே ஆரம்பமானது அரட்டை கச்சேரி....

அதுவரை அமைதிப்புயலாய் இருந்த ரகு மொக்கை புயலாக மாறினான்....நண்பர்களின் கலாய்ப்புகளுக்காகவே அவன் பேசுவது போல் லக்ஸாவிற்கு தோன்றியது....

அதுவரை அவனை கொஞ்சம் கொஞ்சம் கலாய்த்து சீண்டிப்பார்த்த லக்ஸா...இன்னும் சீண்டிப்பார்க்க அவளது துறையான பொருளாதாரத்திற்கு பேச்சை மாற்றினாள்....எதற்குள் செல்ல கூடாதென்று  மிதுனும் கார்த்திக்கும் நினைத்தார்களோ..அதனுள் சென்றது பேச்சு....

அதுவரை பொறுமையாய் இருந்த ரகு தன் வாழ்வை தீர்மானிக்கும் பேச்சுபோல் முழு மூச்சாக பேச ஆரம்பித்தான் அவன் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான் என்று அறிந்த அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்..

மகுடிக்கு ஆட்பட்ட பாம்பு போல் இவளும் அவன் பேச்சிற்கு மயங்கி 2 மணி நேரம் போவது தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்....

இரண்டு மணி நேரமாகியும் இவர்கள் பேச்சு ஓயாததால் மற்ற அனைவரும் எரிச்சலுற்று இவர்களை மெரினா அழைத்துச்சென்றனர்...இல்லை இழுத்துச்சென்றனர்...
.
வழியில்...ரகுவின் மொபைலில் ஒரு குறுஞ்செய்தி...
'' ஆர் யூ எக்கானமிக் ஸ்டூடன்ட்?? ''
பார்த்த எண் சட்டென நினைவுக்கு வரவில்லை....
பதில் அனுப்பினான் '' நோ...ஐயாம் இன்ஜினியரிங் ஸ்டூடன்ட் மே ஐ நோ ஹூஸ் நம்பர் இஸ் திஸ்?? ''

இரண்டு நிமிடம் கழித்து ''இட்ஸ் யுவர்ஸ்''என்று பதில் வந்தது...மிகவும் குழம்பியவாரு மிதுனிடம் கேட்டான்...மிதுன் எண்ணை பார்த்து சிரித்தவாரே..'' மடையா இது உன் நம்பர் தான் நீ தான் லக்ஸாட்ட கொடுத்த அதுக்குள்ள மறந்துட்டியா?? '' என்றான்...

என்ன கூறுவதென்று தெரியாமல் அசடு வழிந்தவாரே...வெளியே பார்த்தான் மிகவும் அழகாய் தெரிந்தது கூவம் கடலுடன் சங்கமிக்கும் இடம்

நேரம் வளரும்.............

No comments: