Tuesday, 23 October 2012

மழை-2

மாலை நேரத்தில் மழையை
ரசிக்கிறாய் நீ....

மழையோடு சேர்த்து உன்னையும்
ரசிக்கிறேன் நான்....

'மது'வென்றழைத்து நீ
திரும்பும் முன்...

உன் கரம் கோர்த்து
இடை பிடித்து

உன் முகம் பார்க்கிறேன் நான்
என் மார்பில் முகம் புதைக்கிறாய் நீ...

நான் இழுத்த விசையோ???
நம் இதழின் பசையோ???

ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது....
நம் உயிர் ஒட்டிக்கொள்ள... ♥

No comments: