Monday, 1 October 2012

தமிழ்

தாய் தமிழ் உன்னிடம்
ததிங்கினத்தோம் போடுகிறது..

ஆயினும் உன் தமிழ்
அழகானது.-அதனுள்

சுமந்திருக்கும் நம் காதலையும்
உன் விடாமுயற்சியையும்
நான் எவ்வாறு விட்டுவிடுவது???

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான்
பாண்டிய மாமன்னன்...

தமிழினால் தன் குடும்பம் வளர்க்கின்றனர்
இங்கு சிலர்...

நீ என்ன செய்தாய்??
உன் காதலை வெளிப்படுத்தும்

கருவியாய் உருவித்தாய்...
கருவரையின் சுகம் பெற்றேன்-உன்

தமிழைக்கேட்கும் பொழுது.தமிழினி
மெல்ல வாழும் ♥

No comments: