கவிதை எழுதலாமென
பேனா எடுத்தேன்...
நீ என்னிடம்
கட்டளையிட்டாய்....
முதல் வரியும்
கடைசி வரியும்
ஒன்றாக இருக்கவேண்டும்,
சரி,அடுத்து??
எரிச்சலாய் கேட்டேன்...
வரிக்கு
இரண்டு வார்த்தை,
மொத்தம்
மூன்று வரி,
சரி
இன்னும்??
முதலும் கடைசியும்
ஒன்றாக இருக்கவேண்டும்,
இன்னும் உண்டோ??
வார்த்தை தடித்து...
என்னை பற்றி
இருக்கவேண்டும்...
அவ்வளவு தானா??
இறுக்கம் தணிந்து...
என்னழகை புகழக்கூடாது
காதல் கூடாது,
ஹம் இதென்ன பிரமாதம்
மனம் குதூகலித்தது...
கைகள் பேனாவைப்பற்ற
மனம் அவளுள் லயிக்க...
''நீயும் நானும்
.
.
.
.
.
நம் வாழ்க்கை
.
.
.
.
.
நீயும் நானும் ''
கவிதை முடிந்ததென
நினைத்த பொழுது ...
''என்னை கட்டியணைத்து
நம் இதழ்
சேர முத்தமிட்டாய்...''
இன்னுமெரு கவிதையாக....
No comments:
Post a Comment