தெருவோரம் எவ்வித
சலனமும் இல்லாமல்
நீ....
தெருவின் மொத்த
குப்பையும் உறவுகொள்ளும்
உன் ஆடை.....
அக்கந்தல் ஆடையிலும்
அறியாமல் மறைந்திருக்கும்
உன் மானம்...
ஊரே இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு நேரெதிரில் நாய்கள் துரத்த ஓடும்
நீ....
உனக்கென ஓர் உலகம் உண்டு
ஆயினும் இவ்வுலகின் அடிமை
நீ...
உனக்குள் பேசி உனக்குள் சிரித்து
யாரையோ விரட்டி யாரையோ தேடி அலைகிறாய்
நீ....
தேவர்கள் போல் இம்மண்ணுலகில் ஓர் வாழ்கை
அவ்விண்ணுலகில் ஓர் வாழ்க்கையென வாழ்கிறாய்
நீ...
ஆணாக இருப்பின்
உன் வாழ்கை வாழ்வது
நீ மட்டுமே...
பெண்ணாக இருந்தால்
உன் வாழ்கையை வாழ்வது கயவர்களும்
நீயும்......
கடவுளை அடையும் படியில்
இடறியதால் இவ்வாழ்கை வாழ்கிறாய்
நீ....?????
நீ....நீயாக வாழ்கிறாய்
மனம் கழன்று என்றும் அப்பெயருடன்
நீ......
சலனமும் இல்லாமல்
நீ....
தெருவின் மொத்த
குப்பையும் உறவுகொள்ளும்
உன் ஆடை.....
அக்கந்தல் ஆடையிலும்
அறியாமல் மறைந்திருக்கும்
உன் மானம்...
ஊரே இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு நேரெதிரில் நாய்கள் துரத்த ஓடும்
நீ....
உனக்கென ஓர் உலகம் உண்டு
ஆயினும் இவ்வுலகின் அடிமை
நீ...
உனக்குள் பேசி உனக்குள் சிரித்து
யாரையோ விரட்டி யாரையோ தேடி அலைகிறாய்
நீ....
தேவர்கள் போல் இம்மண்ணுலகில் ஓர் வாழ்கை
அவ்விண்ணுலகில் ஓர் வாழ்க்கையென வாழ்கிறாய்
நீ...
ஆணாக இருப்பின்
உன் வாழ்கை வாழ்வது
நீ மட்டுமே...
பெண்ணாக இருந்தால்
உன் வாழ்கையை வாழ்வது கயவர்களும்
நீயும்......
கடவுளை அடையும் படியில்
இடறியதால் இவ்வாழ்கை வாழ்கிறாய்
நீ....?????
நீ....நீயாக வாழ்கிறாய்
மனம் கழன்று என்றும் அப்பெயருடன்
நீ......
No comments:
Post a Comment