Sunday, 30 September 2012

''ஙே...ஙே..''

'' ஐ லவ் யூ ''

''ஐ லவ் யூ டூ''

'' என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?? ''

''இப்பவே பண்ணிக்கட்டுமா??''

''ஹம் சரி''

'' ரெண்டு வீட்டு சம்மதத்தோட பண்ணிக்குறேன்''

''சரி.....................ஹேய் கல்யாணத்துக்கப்புறம் இதே மாதிரி கவிதை

எழுதுவியா?? ''

'' ஓ...ஷூர்...''

'' உனக்கு எத்தனை குழந்தை வேணும்?? ''

'' முதல்ல ஒரு பொண்ணு அப்புறம் பையன்''இத்தோட

நிறுத்திருக்கலாம்...சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம்

ஆண்டிங்கிற மாதிரி...

''நம்ம பொண்ணு பிறந்ததுக்கப்புறம் அவளுக்கு மட்டும் அவளோட

ஒவ்வொரு  அசைவுக்கும் கவிதை எழுதுவேன்.....''

'' அவளுக்கு மட்டும் தானா?? அப்போ என்ன அம்பேல்னு

விட்டுடுவியா?? ''

''நா அப்படி சொல்லல...''

''என்ன அப்படி சொல்லல இப்படி சொல்லலனு சமாளிக்குற?? ஒழுங்கா

உனமைய சொல்லு??''

"ஙே ஙே"

'' என்ன முழிக்குற??''

''ஹேய் இல்லடா இப்போ நா வெளில போய்ட்டு ஆத்துக்கு வந்தா..நம்ம

பொண்ணுக்கு toys  வாங்கின்டு வந்தா அதுலயும் உனக்கு வாங்கின்டு

வரனுமா???'' சமாளிக்குறாராமாம்... ;)

'' சரி பொண்ணுக்கு மட்டும் தானா??? அப்போ எனக்கும் என்

பையனுக்கும் இல்லையா???

''ஙே..ஙே..''

'' என்ன முழிக்குற சொல்லு??''

''ஹேய் அது எப்படி வாங்கின்டு வராம இருப்பேனா??? அசடு..''

''அது என்னடா எப்ப பார்த்தாலும் பொண்ணு பொண்ணுனு தலைல

தூக்கி வச்சின்டு ஆடற?? அப்போ எதுக்கு பையன் வேணும் உனக்கு???

என்னைக்கா இருந்தாலும் அடுத்தவனாத்துக்கு போரவள ஏன்டா இந்த

கொஞ்சு கொஞ்சரே வேணும்னா வீட்டோட மாப்பிள்ள பார்த்து கட்டி

கொடுத்துடுவ போல??''

ரோசம் வந்திடுச்சு ''ஆமா அப்படி தான் கட்டிகொடுப்பேன்''

''உனக்கும்...உன் பொண்ணு மாப்பிளைக்கும் வடிச்சு கொட்டதான் நான்

இருக்கேன் பாரு?? போ..நான் என் பையன் கூட போறேன் போடா...''


''ஙே...ஙே..''

''எனக்கு மட்டும் தான் நீயும் உன் கவிதையும் உன் பொண்ணுக்கு கூட

கிடையாது...அவளுக்கு நீ எழுதறதா இருந்த எழுதி என்ட தான் தரனும்

எக்காரணம் கொண்டும் என்னுரிமையை விட்டுதர முடியாது''

'' சரி வா...இப்போ எதுக்கு இதை பத்தி பேசுற?? விடு அப்புறமா

பார்த்துக்கலாம்'' முன்னெற்றியில் முத்தமிட்டான்..

''டேய் கேடி உன்ன பத்தி தெரியும் டா எனக்கு..''

''என்ன தெரியும் ?? ''

''வெவ்வவ்வவ...சொல்லமாட்டேனே...''

'' டிரெயின் வந்திடுத்து...வா கிளம்பலாம்''

'' இரு உன்ட ஒன்னு கேட்கனும்''

'' என்ன??''

''உனக்கு நான் தானே எல்லாம்?? ''

'' அசடு...''

'' என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?? ''

'' உன்ன விட்ட என்னை எவ கட்டிப்பா சொல்லு??''

'' ஐய்யோடா....உன்ன தெரியும் டா கேடி ''

''ஙே...ஙே..''

No comments: