அம்மா தன் பத்து வயது மகனிடம் ''ஏலே கார் வந்திடுச்சு ஒழுங்கா 3வது
ஸ்டாப்புல இறங்கு பஸ் ஸ்டான்ட் பக்கத்துல ஒரு புளியமரம் இறுக்கும்
அதான் அடையாளம்.....நேரா கிழக்கால நடந்தனா ஆச்சி வீடு தெரியும்
ஆச்சிட்ட இந்த ஏனத்த ( தூக்குச்சட்டி) கொடுல இதுல அவுகளுக்கு
பிடிச்ச முறுக்கும் அதிரசமும் இருக்கு....உனக்கு வேணும்னா இரண்டு
எடுத்து வாய்ல போட்டுக்க..இந்தா டிக்கட்டுக்கு 5 ரூபா மிச்சத்த
பத்திரமா வெச்சிக்க உங்கய்யா கருக்கல்ல வந்து கூட்டிட்டு போவாரு....
டிக்கட்டு 3.50 அப்போ மிச்சம் 1.50 அண்ணாச்சி கடையில கல்கோனாவும்,தேன்
மிட்டாயும் வாங்கலாம் அம்மா மிச்சத்தை கேட்க மாட்டா...என்று மனதினுள் குதூகளித்தான்
அம்மா அவனருகிள் தொடர்ந்தவளாக '' தாத்தா பாட்டிய படுத்தாத..அவுகட்ட அது வேணும் இது வேணும்னு தொந்திரவு கொடுக்காதல...
புரிஞ்சதால???? உங்கப்பன மாதிரியே முழிக்காத....பாத்து போய்டுவால சரியா???
மகன் அனைத்தையும் கேட்டவாறே ''யம்மா சும்மா உசுர வாங்காத உன் சோலிய பாரு
நடவைக்கு ஆட்கள் போராங்க போ...'' என்று எரிச்சலானான்
பேருந்து நிறுத்ததில் வந்து நின்றது....
அம்மா நடத்துனரிடம் ''யண்ணாச்சி இவுன எங்க ஊர்ல இறக்கி விட்டிடுதீயலா??
மறக்காம பாக்கி சில்லறையக் கொடுங்க...''
நடத்துனர் இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ''ரைட் ரைட் என்று கூவினார்''
அச்சிறுவன் கையிலிருந்த 5 ரூபாய் நோட்டைக்கொடுத்தான்...
நடத்துனர் ''ஏலே இந்தா சீட்டை பிடி மிச்சம் 1.50 இறங்கும் போது தரேன் நீ அந்த காலியான
சீட்டுல உக்காரு...''
கூட்டமில்லாத மதிய வேலை ஆதலால் இவனுக்கு உட்கார இடமும் கிடைத்தது
ஜன்னலோரம் வேடிக்கைப்பார்த்தவாறு அவ்வப்பொழுது சீட்டின் இடுக்கு வழியாக
நடத்துனரை பார்த்துக்கொண்டிருந்தான்...
அவன் மனதில் மிச்சத்தை தராமல் போய்விட்டால் அப்புறம் அண்ணாச்சி கடையில
தேன்மிட்டாயும் கல்கோனாவும் எப்புடி வாங்குறது என்ற எண்ண அலைகள் அவனைச்
சிதரடித்தன....மனதில் அழுகை பெருக்கெடுத்தது....மனம் கொள்ளாமல் கேட்டும் விட்டான்
''சார்வால் அடுத்த ஸ்டாபிங்கு எங்க பாட்டி ஊரு''
நடத்துனர் ''உம் தெரியும் டே இதே ரூட்டுல தான்டே நீ பிறக்குரதுக்கு முன்னாடில இருந்து
ஓடிட்டு இருக்கேன் எனக்கே சொல்லித்தரியால?? ''
சிறிது அமைதி காத்தவனாய் மீண்டும்...
''சார்வால்''என்று பம்மி அழைத்தான்...
நடத்துனர் எரிச்சலாக ''என்னல வேணும் ஒனக்கு ஒழுங்க கணக்க பாக்க விடுதியா??'' என்று கத்தினார்
இவனும் சிறிது மென்மையாக ''மிச்ச சில்லற 1.50'' என தயக்கத்துடன் கேட்டான்
'' செவத்த மூதி உங்காச கொண்டுபோய் கோபுரமால கட்ட போரேன்?? இரு தரேன்'' என்று உச்சஸ்தாயில் கத்தினார்...
இவனுக்கு அழுகையே வந்துவிட்டது..
இறங்கும் முன் இந்தா மூதி உன் காசு இத நா என்ன முழுங்கவா போறேன் என்று செல்லமாக
அவன் கன்னத்தில் தட்டி கையில் தினித்தார்..
இவனும் மகிழ்ச்சிப்பீறிடுக்க இருக்கமாக அக்காசுகளை பிடித்துக்கொண்டான்....
நடத்துனர் அடித்த ஒற்றை விசிலில் கிரிச்சென்று நின்றது பேருந்து....
இவனும் தடி அகற்றிய கன்று போல அண்ணாச்சி கடை நோக்கி ஓடத்துவங்கினான்....
No comments:
Post a Comment