Saturday, 22 September 2012

தேடல்

சற்று விசித்திரமான தேடலுள்ளவன் நான்...

அவ்வகையில் முல்லை தமிழ் மனக்கும் நெல்லையில்

இன்று வரை அவர்களை அறியாமலே அவர்கள் சேர்த்துவைத்திருக்கும்

பழந்தமிழ் சொற்றொடர்களில் நான் கண்டு வியந்தவை சில....

1)கொண்டி - கதவின் தாழ்பாள்

பெயர் காரணம்- இங்கு அமைந்திருக்கும் கதவுகளின் அமைப்பை பொருத்து கூப்பிடும் வழக்காடுஞ்சொல்

2)வாரியள் - துடைப்பம்,விளக்குமாறு...

பெயர் காரணம்- வீட்டில் உள்ள குப்பைகளை வாரி அள்ள பயன்படுவதால் வாரி+அள்ளுதல் மறுவியது..

இன்று இடம்பெயர்ந்த இலங்கை தமிழர்களிடம் வழக்கிலுள்ளது..

3)கோட்டி -பைத்தியம்|லூசு

பெயர் காரணம்- கோணலான மூளை கொண்டவன்..

4)பைய - மெதுவாக

பெயர் காரணம் - திருஞானசம்பந்தரால் தருவிக்கப்பட்டது...இன்று நெல்லை மதுரை பகுதிகளிலுள்ளது..

5) ஏனம் - பாத்திரம்

பெயர் காரணம் - ஒரு பொருளை ஏந்திச்செல்ல பயன்படுவது...

6)சாரம் -லுங்கி| கையிலி

பெயர் காரணம் - சரியான காரணம் தெரியவில்லை விசாரித்தவரை வேடிக்கையாக ஒருவர் கூறியது

எதையும் சார்ந்திராமல் ப்ரீயா இருக்க உதவுவது...

7) கல்கோனா -மிட்டாய் வகை

பெயர் காரணம்- கல்லைப்போன்று கடினமாக இருக்கும்...

8)சோலி - வேலை

பெயர் காரணம் - தெரியவில்லை தேடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் மலையாளத்தில் 'ஜோலி'எனக்கூறுவார்கள்

9) குச்சி - பல்பம்

பெயர் காரணம்- ஒல்லியாக இருப்பதால் குச்சி என்றே நிலைத்தது...

இன்னும் பல வார்த்தைகள் நியாபகமில்லை...

கெட்டவார்த்தையில் கூட பழந்தமிழ் விளையாடும் சபை நாகரீகம் கருதி எழுதவில்லை

முத்தாய்ப்பாக நான் இருக்கும் கிராமத்தின் பெயர்

அடைச்சாணி - அடைத்த காணி (எல்லாப்பக்கங்களிலும் வயல்வெளி அடைத்திருக்கும்)

என்பது மருவி அடைச்சாணி என்றானது

மற்ற திராவிட|வட மொழிகளுக்கு நம் தமிழ் அளித்த வார்த்தைகள் மற்றை தேசத்தில் மருவி வழக்கிலுள்ள

தமிற்சொற்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுத ஆசையாக உள்ளது..

No comments: