Wednesday, 26 September 2012

தொடரும் தேடல்

இன்று திரைப்படம் பார்க்கலாம் என்று சற்று சீக்கிரமாக  

கிளம்பிவிட்டேன்...எப்பொழுதும் நேர் வழியில் அம்பை

செல்லும் பேருந்தில் ஏறாமல் ஊர் சுற்றிப்போகும்

பேருந்தில் ஏறினேன் நகரப்பேருந்தென்றாலும் கட்டணம் அதிகம்...

நடத்துனரிடம் ''அம்பை ஒன்னு'' என்று 10 ரூபாய் கொடுத்தேன்

என்னை விசித்திரமாக பார்த்து  '' சார்வாள் இது ஊர் சுத்திப்போகும்

அடுத்த பஸ் பின்னாடியே வரும் அதுல வரலாம்ல???''

நான் சிரித்துக்கொண்டே ''சரி பரவாயில்லை ஏறிட்டம்ல கொடுங்க

உங்களுக்கு பிடிக்கலனா இறங்கிடுதேன்'' கஷ்டப்பட்டு அக்ரஹாரத்தமிழை

மறைத்தேன்....

நடத்துனர் ''என்ன இப்புடி சொல்லிட்டீக நீங்க ஏதோ அவசர சோலியா

போரீங்கனு நினைச்சுதான் கேட்டேன்....இந்தாங்க டிக்கட்டு உள்ள ஏறி

உக்காருங்க''

ஏறி நேராக நடத்துனர் இருக்கையின் சன்னலோரம்  அமர்ந்தேன் எனக்கு

பிடித்த இடம்...

நெல்லை மாவட்டத்தை மழைக்காலங்களில் சுற்றுவதைவிட இவ்வாறு

சூரியன் வாட்டி எடுக்கும் காலங்களில் சுற்றுவது அழகானது....ஏனோ

தெரியவில்லை மக்களோடு பயணிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி

சொல்லிலடங்காது....இன்று சிறிதளவு பொருளாதர முன்னேற்றம்?! அடைந்த

பொழுதிலும் அவர்களிடம் ஊரிப்போன மரபும் கலாச்சாரமும் பிரம்மிக்க

வைக்கிறது...


எனக்கு முன் இருக்கயில்  இரு பள்ளி மாணவர்கள்

விளையாடிக்கொண்டிருந்தார்கள்..முக ஜாடை அண்ணன் தம்பியென

சுட்டியது....

அண்ணன் தம்பியிடம் ''ஏலே வீடு பத்தியெரியுது வாடா திருடா''

தம்பி ''வரமாட்டேன் போடா''

''அம்மா கூப்பிடுவாங்க வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

''ஐஸ்கிரீம் வாங்கிதறேன் வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

''குர்குரே வாங்கி தாறேன் வாடா ''

''வரமாட்டேன் போடா''

''பரோட்டாவும் சால்னாவும் வாங்கித்தறேன் வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

அதற்குள் அவர்கள் நிறுத்தம் வந்தது எழுந்து இறங்கியவாரே அண்ணன்

 ஒவ்வொன்றாய் வாங்கித்தருவதாக வரச்சொல்லிக்கொண்டிருப்பான்...

என் மனம் இவன் திருடா என்றழைக்காமல் தம்பி என்றழைத்திருந்தால்

 வந்திருப்பானோ என்று தோன்றியது அதைவிட இதே மாதிரியாக

ஆதிச்சநல்லூர் பழந்தமிழ் நாகரீக காலத்தில் எம்மாதிரியான

விளையாட்டுக்கள் இருந்திருக்குமென என்னவோட்டம் சரியான பதில்

கிடைத்தால் வரலாற்றுப் பதிவாக்க முடியுமா என்ற நப்பாசை மனதினுள்

எழுந்தது.....பழங்கால பதிவுகள் கிட்டாத பொழுது உண்டாகும் வலி

கொடியது...தேடல் இன்னும் தொடரும் என் கடைக்காலம் வரை அது

முடியாது போனாலும் சமகால வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு

எடுத்துச்செலவதில் உறுதியாய் உள்ளேன்...

தேடல் தொடரும் என் அந்திம பயணம் வரை...

No comments: