Friday, 21 September 2012

காதலிக்க நேரமுண்டு -2

அமைதியாய் டீவியில் மூழ்கிய ரகுவை விசித்திரமாக
 பார்த்துக்கொண்டிருந்தாள் லக்ஸா...

அங்கு வந்த பவி ( மிதுனின் காதலி,லக்ஸாவின் உயிர்த்தோழி) இவளை
 பார்த்து சற்று செறுமியபடி....
''  வந்ததுல இருந்து அவனையே பார்த்திட்டு இருக்க ஏதாவது ரசாயன மாற்றமா??? '' என்று கண் அடித்தபடி அவளருகில் அமர்ந்தாள்..

லக்ஸா நினைவு திரும்பியவளாக '' இல்ல டா வார்த்தைய வைத்தே ஊர சொல்ரான் சம் திங் மிஸரில???'
பவி : "நானும் மிதுன்ட இவனை பத்தி இப்போ தான் கேட்டேன் டி...கொஞ்சம் வித்தியாசமானவனாம் யாரிடமும் ஈஸியா பழக மாட்டானாம் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ...."

லக்ஸா : சரி நான் இங்க வந்து ரொம்ப நாள் ஆகுது எனக்கு ஒரு தனி சிம் கார்ட் கிடைக்குமா???

பவி : இரு மிதுன்ட கேட்குறேன்...மிதுன் இங்க வாடா....

மிதுன்  உள்ளிருந்து வந்தான்..''.கியா ஹே???'' என்று செல்லமாக அவள் முதுகில் தட்டினான்...

பவி : இவளுக்கு சிம்கார்ட் வேணுமாம் டா உன் ஐடில வாங்கி கொடு.டா

மிதுன் ரகுவை நோக்கி '' மச்சி ஒரு சிம் கார்ட் வேணும்  டா... முடியுமா?? ''
ரகு ''ஐடி ஃப்ரூப்....போட்டோ??? ''

லக்ஸா : '' டுட் எனக்காக இது கூட பண்ண மாட்டியா?? நானும் உனக்கு பிரண்டு தானே?? ''

ரகு சற்று யோசித்தவாறு தன் பையிலிருந்து ஒரு பிலாஸ்டிக் கவரை எடுத்து அதிலுள்ள சில சிம்கார்டுகளை எடுத்து கொட்டி அதிலிருந்து ஒரு சிம்மை மட்டுமெடுத்து அவளிடம் நீட்டினான் ''இது எனக்கு பிடிச்ச நம்பர்..... பிரண்டுனு சொன்னதால வச்சுக்கோ...''

பவி : ''இத்தனை சிம் வச்சிருக்க நீ என்ன தீவிரவாதியா???''
ரகு அவளை சட்டை செய்யாமல் மற்ற சிம்கார்டுகளை மீண்டும் பையில் போட்டான்

லக்ஸா : '' தேங்க்ஸ் டுட்'' ரகு அதை காதில் வாங்காமல் சமயலரையில் உள்ள குடத்தை தூக்கி ஒரே மடக்காக தண்ணீர் குடிப்பதை அனைவரும் விசித்திரமாக பார்த்தார்கள்

ரகு மிதுனிடம் '' டேய் டைம் ஆச்சு தூக்கம் வருது என்ன பண்ண போற???''

மிதுன் '' மச்சி நாங்க ரெண்டுபேரும் ரூமுக்கு போறோம் கெஸ்ட் ரூம்ல லகஸா படுக்கட்டும் நீ சோபால படுத்துக்கோடா...பிளீஸ்''

இடைமறித்த லக்ஸா ''டுட் நோ பிரபலம் நீ கூட பெட் ஸேர் பண்ணிக்கோ நோ அப்ஜக்ஸன்'' ..

ரகு '' பரவா இல்லை நான் இங்கயே படுத்துக்குறேன்''

லக்ஸா '' அப்போ நானும் இங்க படுத்துக்குறேன் நீ என்ன கடிச்சு முழுங்கவா போற??? ''

ரகு :'' அது உன் இஷ்டம்''

 இருவரும் டீவியில் மூழ்கி்னர்...மணி இரவு 11 எட்டியது இருவருக்கும் உறக்கம் கண்ணை சொருகியது...அவள் அவனை பிறந்த குழந்தையை தாய் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள்...அவன் அவளை பார்தத பொழுது தலையை திருப்பி கொண்டாள் இவனும் அவளை சட்டை செய்யாமல் சமயலறை நோக்கிச்சென்றான்... கதவின் முன்பு நின்று பின்னால் திரும்பி சற்று நிதானமாக ''லக்ஸா காஃபி வேணுமா??? ''என்றான்...

திடுக்கிட்ட லக்ஸா 'இரவு தூங்கும் முன் காஃபியா??'என்று விளித்தாவாரு வேண்டாமென்று கூறுமுன் அவ்விடத்தைவிட்டு நகன்று சமயலறையினுள்
மறைந்தான்...

இவளும் அவ்விடத்திலேயே உறங்கத்தொடங்கினாள்....உள்ளிருந்து காஃபி குவளையுடன் வந்த ரகு குவளையை வைத்துவிட்டு அவளை ஒழுங்காக படுக்க வைக்க அருகில் வந்தான் எழுப்புவதா?? இல்லை தானே நகற்றுவதா?? என்ற  குழப்பத்தில் அவளருகில் கையை கொண்டு சென்றான்...

சற்றென்று விழித்தவளாய் அவன் கண்களை இமைக்காகமல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்ன செய்வதென்று தெரியாமல் ரகு '' கொஞ்சம் ஒழுங்கா படுத்துக்கோ...கீழ விழுந்திடாத'' எனக்கூறிவாரே தரையில் படுத்துறங்கினான்....

 இவளும் உள்ளுக்குள் காதலெனும் கயவன் விழித்தெழுவது தெரியாமல் உறங்கினாள்......

நேரம் வளரும்.....

No comments: