Tuesday, 25 September 2012

என் முதல் படைப்பு....

 இது என் 6 வகுப்பில் கிறுக்கியது இன்று வரை அதே எழுத்து நடை தான்

உள்ளது....சுவாரசியத்திற்காக சிறு மாறுதலுடன்....

இதை வாசித்து '' inception...transformers "" போன்ற படத்தின்

பாதிப்பென்று சொல்ல முடியாது ஏனென்றால் அப்பொழுது எனக்கு

தெரிந்த ஆங்கில படங்கள் ""jurassic park,deep blue sea,""

மட்டுமே.........
--------------------------------------------------------------------

 
மனோவின் அம்மா அவனை வேகமாக எழுப்பினார்....

திடுக்கிட்டு எழுந்தவன்  என்ன மா என்னாச்சு??? என்றான்....

அம்மா ''உடனே நாம தாத்தா ஊருக்கு போகனும் இங்க இருக்க கூடாது''

என்றாள்.

எதுக்குமா போகனும் என்னாச்சு?? இன்னைக்கு இராத்திரி டீவில பாப்பாய்

ஷோ பாக்கனும்

''அதுலா அங்க போய் பார்த்துக்கோ...முதல்ல கிளம்பு''

அவர்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராயினர்...

''அம்மா வெளியில என்ன மா சத்தம்???''

''காதை பொத்திக்கோ ஒன்னுமில்லை...பயப்பிடாத அம்மா இருக்கேன்''

''ஹம் சரி''

இருவரும் நடக்க தொடங்கினர்...

எங்கும் வெடி சத்தம் எல்லாமும் அழிந்துவிட்டது....எல்லா வாகனங்களும்

ராட்சத உருவமெடுத்து ஒவ்வொறுவராய் அழிக்கின்றது....

கையை பிடித்துக்கொண்டிருந்த அம்மாவை காணவில்லை....

இவன் விசித்திர உருவம் பெற்று அவ்வரக்கர்களிடம் சண்டை

போட்டுக்கொண்டிருக்கிறான்..

அனைத்தும் முடிந்தது இவன் மட்டும் உயிருடன் இருக்கிறான்...

சடாரென யாரோ அழைப்பது போல் உள்ளது அவன் அம்மா அவனிடம்...

மனோ சீக்கிரம் எழுந்திட்றா தாத்தா வீட்டுக்கு போகனும் என்று

அடுக்களையிலிருந்து

கத்திக்கொண்டிருந்தார்...

''எல்லாம் கனவா?? ச்ச....பயந்துட்டேன்''என்று கூறியவாரு அம்மாவை நோக்கி
நகர்ந்தான்

No comments: