Friday, 24 August 2012

''சொக்கா சொக்கா சோறுண்டோ??? சோழியன் வந்து கெடுத்தான் டே ''

எல்லோரது வாழ்விலும் கதை கேட்ட அனுபவங்கள் உண்டு...இன்றும்  கேட்டுக்கொண்டிருப்போம் அல்லது சொல்லிக்கொண்டிருப்போம் அதுபோல் சற்று விசித்திரமான கதை என் சிறுவயதில் என் தங்கை சாப்பிடுவதற்காக என் பெரியம்மா கூறுவார்..
இதோ அவர்களி்ன் கதை அவர்களின் பாணியில்
'' ஒரு ஊர்ல ஒரு அம்மாவும் பையனும் வாழ்ந்தாங்களாம்...அவங்க பையனுக்கு என்ன சாப்பாடு கொடுத்தாலும் உடம்புல ஒட்டவே இல்லயாம் அந்த சத்தெல்லாத்தயும் ஒரு பேய் எடுத்துக்கிச்சாம்....அதனால அவங்க அம்மா ஒரு ஜோசியன்ட கூட்டிட்டு போனாங்களாம் அந்த ஜோசியன் நடந்தத சோழி  போட்டு பார்த்துட்டு இனிமே புறவாச கதவை கொண்டிபோட்டுட்டு வீட்டுல விளக்கேத்திட்டு அப்புறமா சோறு கொடுனு சொல்லி அனுப்பினாராம்..அந்த அம்மாவும் அப்படியே செஞ்சாங்களாம் அந்த பேயும் ''சொக்கா சொக்கா சோறுண்டோ???  சோழியன் வந்து கெடுத்தான் டே '' னு வீட்டு பு்றத்துல இருந்து கத்திட்டே போ்யிடுச்சாம்''னு சொல்லி முடிக்கவும் கவளம் சாதம் காலியாகவும் சரியாக இருக்கும் நேற்று மாலை மின்சாரம் இல்லாத பொழுது என் தங்கை மீண்டும் சிறு பிள்ளையாய் கதை கேட்டாள் அதே உற்சாகம் தழும்ப....21 வயதாகியும் ஒல்லி பாச்சாவாய் இருக்கிறாள் ஒரு வேலை அந்த பேய் கதைகேட்ட இவளின் சத்துக்களை உரிஞ்சிருக்குமோ??? என்ற என்னம் என்னுள் வேடிக்கையாக வந்து போனது

No comments: