53.
என் கவிதைகளுக்கு
மட்டும் உயிரிருந்தால்என்னுடன் சமவெளியில்
கை கோர்த்து நடந்திருக்கும்
என்னுடன் சண்டையிட்டு
வென்றிருக்கும்,
என்னுடன் புதைந்து
என் காதலை சுவைத்திருக்கும்
என்னுடன் புணர்ந்து
என் காமத்தை கொன்றிருகும்
என்னுடன் விளையாடி
என் பால்யத்தை திருப்பியிருக்கும்
என் சாவிற்கும் அழுது
என் கல்லறையில் மௌனித்திருக்கும்
பாவம் அவை கவிதைகளாகிவிட்டதால்
எழுத்துக்களாய் சிலுவை ஏறுகின்றன.....
No comments:
Post a Comment