Wednesday, 30 October 2013

45.
ஊரெல்லாம் சுற்றிவிட்டு
யாருக்கும் தெரியாமல்
பசிக்கின்ற பொழுது
அடுப்பங்கறையினில்
சத்தமில்லாமல் பாத்திரம்

உருட்டி வயிரு
முட்ட உணவருந்தி
வால் மட்டும்
காற்றில் அசைந்து ஆட
வந்த சுவடில்லாமல்

விருட்டென மறைந்து
தனித்தொரு உலகில்
வாழுந்து நம்முடன்
பழகி இருட்டினில்
ஒளிரும்

கண்களைக்கொண்ட
பூனையினைப்போல்
நம் காதலும்
இவ்வுலகில்
தனித்தே வாழும்

No comments: