Wednesday, 30 October 2013

28.
''காதலுக்கு கண்கள் இல்லை'' என்று
யார் சொன்னது??

கண்கள் இருந்ததால் தான்
இமைகள் மூடியது

இமைகள் மூடியதால் தான்
உறக்கம் வந்தது

உறக்கம் வந்ததால் தான்
கனவும் வந்தது

கனவும் வந்ததால் தான்
நீயும் வந்தாய்

நீயும் வந்ததால் தான்
சண்டையிட்டாய்

சண்டையிட்டதால் தான்
காதல் செய்தாய்

காதல் செய்த்தால் தான் -என
இழுக்கும் முன்பே

இதழ்கள் உரசி
இதயம் தீப்பிடிக்க

உடல்கள் உடையும் வரை
முத்தம் தந்தால்...   

No comments: