24. எல்லாரும் ரக்ஷாபந்தன் வாழ்த்து கதைகள் சொல்லியாச்சா??? எனக்கு இதுலாம் அவ்வளவா பழக்கமில்லை இன்னைக்கு வேறு ஒரு ஸ்பெசல்..
இன்று ஆவணி அவிட்டம்..சூரியபகவானுக்கு மிக உகர்ந்த நாளாம்.எங்க ஓடுறீங்க??? அதை பத்திலாம் மொக்கை போடலை..முழுசா தெரியவும் செய்யாது... இது வேற
எப்போதும் போல் காலை குளித்து முடித்து பிரம்மதேசம் (பெயர்காரணம் தனிபதிவா போடலாம் அவ்வளவு ஸ்பெசல்) சென்று எப்பொழுதும் போல கடனா நதிகரையில் உள்ள கோவிலுக்கு சென்றாயிற்று...
எப்பொழுதாவது திருமணத்தில் சந்திக்கும் பெண்கள் போல இங்கு ஆண்கள் சற்று பொறாமையுடனேயே பேசி பழகும் ஒரு நாள் இன்று..
''ஏலே மாமாக்கு பவித்ரத்தை குடு... அங்கதாம்ல இருக்கும் அந்த பஞ்சாத்ர ருத்ரனி...நன்னா கண்ணை வைச்சு பாருடே...
""சுகர் பேசன்ட்லாம் ஆத்துல காப்பி குடிச்சின்டு வந்தேளா?? இங்க முதல்ல யஜூர் வேதத்தை முடிச்சிட்டு நம்ம ரிக்குவருவோம் அது வரைக்கும் சத்த உக்காருங்கோ.. "
என எங்கும் எளிதில் கேட்க கிடைக்காத நெல்லை பிராமணத்தமிழ் கேட்கலாம்...
சில வருடங்கள் மட்டுமே இப்படி ரிக்,யஜூர் சேர்ந்து வரும் மற்ற வருடங்கள் எங்களுக்கு முதல் நாள் வந்துவிடும்...
இது எரிச்சலாக்கும் நான் அப்படியே கடனாவில் கடனே என்றில்லாமல் ஐக்கியமாகிவிடுவேன்..இடுப்பளவு தண்ணீரில் உள்ளிருக்கும் மணல் அப்படியே தங்கம் போல் ஜொலிக்கும்....
இப்பொழுது அதுவுமில்லை மணல் அள்ளி அள்ளி ஆற்றை கற்பழித்துவிட்டுள்ளனர்...
'' ஓம் பூஹூ. நமோ பார்த்த... ஸ்வாகாஹ: ''போன்றவற்றை நான் ஒருவித மிரட்சியுடன் திரும்ப சொல்வேன்..
அந்த ஹோமப்புகை கண்களுக்கு சிறிது எரிச்சல் குடுத்தாலும் சளி சுத்தமாக போய்விடும் அதன் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்பொழுது கண் எரிச்சல் தவிர எதுவுமில்லை சாணமும் உமியும் கூட தரம் மாறிவிட்டது..போலும்
பூணல் கொடுக்கும் பொழுது என் பக்கத்தில் இருந்த பெங்களூரு வாசியான சாப்ட்வேர் இன்ஜினியருக்கு 1 பூணல் கொடுத்து எனக்கு 2 கொடுத்தார் வாத்தியார்..ஆனால் அவருக்குத்தான் திருமணமாகி குழந்தை இருக்கு, நியாயமா 3 கொடுத்திருக்கனும்
இதை பார்த்துட்டு அப்பா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட ''உன் பையன் பிரம்மச்சாரியா இல்லை குடும்பஸ்தனா?? நீயே கேட்டு சொல்லு''னு ஒரு பிட்டு போட ஒரு பரேட் நடந்தது தனிக்கதை
எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்தால் வடை பாயசத்துடன் சமயல் வாசம் ஊட்டுப்பிறையிலிருந்து வாசல் வந்து எங்களை அம்மாவின் ஆரத்தியுடன் வரவேற்கும்...
இன்னைக்கு அம்மா ஆரத்தி எடுக்குறப்போ சீக்கிரம் செட்டிலாகி அடுத்தவருடம் தலை ஆவணிஅவிட்டத்துக்கு ஆரத்தி எடுக்கனும்னாங்க அதுக்குத்தான் அர்த்தம் புரியலை..
ஒரு வழியா வயிரு முட்ட வடை பாயசத்துடன் சாப்பிட்டு பூணூல் மாற்றியாயிற்று.. இனிமேலாவது எப்பொழுதும் ''பேஸ்புக் தன்நம:'' னு இல்லாமல் 2 வேளை சந்தியாவந்தனம் செய்யனும்...
இது எல்லாத்துக்கும் முன்னாடி அப்பாகிட்ட இன்னொருவாட்டி அபிவாதையே கேட்டு மனப்பாடம் பண்ணனும்...
இன்று ஆவணி அவிட்டம்..சூரியபகவானுக்கு மிக உகர்ந்த நாளாம்.எங்க ஓடுறீங்க??? அதை பத்திலாம் மொக்கை போடலை..முழுசா தெரியவும் செய்யாது... இது வேற
எப்போதும் போல் காலை குளித்து முடித்து பிரம்மதேசம் (பெயர்காரணம் தனிபதிவா போடலாம் அவ்வளவு ஸ்பெசல்) சென்று எப்பொழுதும் போல கடனா நதிகரையில் உள்ள கோவிலுக்கு சென்றாயிற்று...
எப்பொழுதாவது திருமணத்தில் சந்திக்கும் பெண்கள் போல இங்கு ஆண்கள் சற்று பொறாமையுடனேயே பேசி பழகும் ஒரு நாள் இன்று..
''ஏலே மாமாக்கு பவித்ரத்தை குடு... அங்கதாம்ல இருக்கும் அந்த பஞ்சாத்ர ருத்ரனி...நன்னா கண்ணை வைச்சு பாருடே...
""சுகர் பேசன்ட்லாம் ஆத்துல காப்பி குடிச்சின்டு வந்தேளா?? இங்க முதல்ல யஜூர் வேதத்தை முடிச்சிட்டு நம்ம ரிக்குவருவோம் அது வரைக்கும் சத்த உக்காருங்கோ.. "
என எங்கும் எளிதில் கேட்க கிடைக்காத நெல்லை பிராமணத்தமிழ் கேட்கலாம்...
சில வருடங்கள் மட்டுமே இப்படி ரிக்,யஜூர் சேர்ந்து வரும் மற்ற வருடங்கள் எங்களுக்கு முதல் நாள் வந்துவிடும்...
இது எரிச்சலாக்கும் நான் அப்படியே கடனாவில் கடனே என்றில்லாமல் ஐக்கியமாகிவிடுவேன்..இடுப்பளவு தண்ணீரில் உள்ளிருக்கும் மணல் அப்படியே தங்கம் போல் ஜொலிக்கும்....
இப்பொழுது அதுவுமில்லை மணல் அள்ளி அள்ளி ஆற்றை கற்பழித்துவிட்டுள்ளனர்...
'' ஓம் பூஹூ. நமோ பார்த்த... ஸ்வாகாஹ: ''போன்றவற்றை நான் ஒருவித மிரட்சியுடன் திரும்ப சொல்வேன்..
அந்த ஹோமப்புகை கண்களுக்கு சிறிது எரிச்சல் குடுத்தாலும் சளி சுத்தமாக போய்விடும் அதன் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்பொழுது கண் எரிச்சல் தவிர எதுவுமில்லை சாணமும் உமியும் கூட தரம் மாறிவிட்டது..போலும்
பூணல் கொடுக்கும் பொழுது என் பக்கத்தில் இருந்த பெங்களூரு வாசியான சாப்ட்வேர் இன்ஜினியருக்கு 1 பூணல் கொடுத்து எனக்கு 2 கொடுத்தார் வாத்தியார்..ஆனால் அவருக்குத்தான் திருமணமாகி குழந்தை இருக்கு, நியாயமா 3 கொடுத்திருக்கனும்
இதை பார்த்துட்டு அப்பா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட ''உன் பையன் பிரம்மச்சாரியா இல்லை குடும்பஸ்தனா?? நீயே கேட்டு சொல்லு''னு ஒரு பிட்டு போட ஒரு பரேட் நடந்தது தனிக்கதை
எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்தால் வடை பாயசத்துடன் சமயல் வாசம் ஊட்டுப்பிறையிலிருந்து வாசல் வந்து எங்களை அம்மாவின் ஆரத்தியுடன் வரவேற்கும்...
இன்னைக்கு அம்மா ஆரத்தி எடுக்குறப்போ சீக்கிரம் செட்டிலாகி அடுத்தவருடம் தலை ஆவணிஅவிட்டத்துக்கு ஆரத்தி எடுக்கனும்னாங்க அதுக்குத்தான் அர்த்தம் புரியலை..
ஒரு வழியா வயிரு முட்ட வடை பாயசத்துடன் சாப்பிட்டு பூணூல் மாற்றியாயிற்று.. இனிமேலாவது எப்பொழுதும் ''பேஸ்புக் தன்நம:'' னு இல்லாமல் 2 வேளை சந்தியாவந்தனம் செய்யனும்...
இது எல்லாத்துக்கும் முன்னாடி அப்பாகிட்ட இன்னொருவாட்டி அபிவாதையே கேட்டு மனப்பாடம் பண்ணனும்...
No comments:
Post a Comment