Friday, 18 October 2013

25.
கலவிப்பாட்டு
---------------------
முகம் மறைக்க மார்பில்
இடம் கேட்கிறாய்

முதல் முத்தம் உன் முன்
தலையிலா இடுவது??

கண் பார்க்க இமைகள்
மறுதலித்த போதும்

இதயச்சத்தம் கேட்டு
என்னவோ கதைகிறாய்

இரகசியக் காட்டுக்குள்ளே
இரசனையில்லா கடவுளாக

இதழ்களில் மட்டும் இத்தனை
சுவைகள் எதுக்கடி தந்தாய்??

உச்சி முதல் உரசும்
உன் இதழும் காய்கிறதடி

என் இதழ் பக்கம்
வரும் முன்னே?!

இன்னும் என்ன வேண்டும்
எடுத்துச் செல்

தயை செய்து காதல்
பார்வை வீசாதே

மூர்ச்சையாகிப்போவேன்
மீண்டும் தொடங்கும் முன்

எதுவும் செய்யாமல்
என் மீது படுத்துறங்கு

விடிந்த பின் செய்ய
வேலைகள் அதிகம்............. 

No comments: