21.
மூடிய கரத்தினுள்
என்ன இருக்கிறது
எனக் கேட்கிறாய்.
இது ஆயகலைகளில் ஒன்று என்கிறேன்.
அப்படியா என ஆச்சர்யமுறுகிறாய்.
மீண்டும்
வினவுகிறாய்
மூடிய கரத்தினுள்
என்ன இருக்கிறது
என்கிறாய்,.
கண்மூடி ஒருகணம் யோசிக்கிறேன்.
சீக்கிரம் சொல் என்கிறாய்.
இன்னும் கண்திறக்கவில்லை
நான்.
மூடிய உன் கரத்தை
என்னிரு கரங்களாய் பற்றிக்கொள்கிறேன்.
"உன் மூடிய கரத்தினுள் இருப்பது
எனக்கான நிம்மதி.
நான் யாசிக்கும் பேரன்பு.
நான் கண்ணீருகுத்தபின் தேம்பிச்சரியும் பொன்மடி
நான் வீழ்ந்தபோழ்து எனைத் தேற்றித் தலைகோதும் உன் கைவிரல்கள்
நான் அடங்காத பேரலையாய் தளும்பித் ததும்புகையில் எனைச் சேமிக்கும் பெண்தேக்கம்
நான் ஆழ்ந்து உறங்குகையில் என் கனவுகோதும் மயிலிறகு
நான் அரற்றிச்சிரிக்கையில் எனை அதட்டி வைக்கும் அன்னைமொழி
நான் நானாக மறுக்கையில் எனைத் திருப்பித் தரும் தேவவரம்
நான் நானாக மறுகுகையில் எனைப் பெருக்கித் தரும் போதிமரம்
நான் எல்லாமுமாகையில் எல்லாமுமாகும் இன்னொருவள்
நான் எதுவுமற்றிருந்தாலும் எல்லாமுமாகும் என்னொருவள்
மொத்தத்தில்
உன் கைரேகைப்படுகையில் ஓடிக்கொண்டிருக்கும்
காதல் நதி என்கிறேன்."
கரங்களை விலக்குகிறேன்.
உன் கரத்தைப் பிரிக்கிறாய்.
என்னிதழ் பதிக்கிறேன்.
பிறக்கையில் அது வியர்வை.
இனி அதற்கொரு பெயர்வை.
அது காதல்நதி.
என்ன இருக்கிறது
எனக் கேட்கிறாய்.
இது ஆயகலைகளில் ஒன்று என்கிறேன்.
அப்படியா என ஆச்சர்யமுறுகிறாய்.
மீண்டும்
வினவுகிறாய்
மூடிய கரத்தினுள்
என்ன இருக்கிறது
என்கிறாய்,.
கண்மூடி ஒருகணம் யோசிக்கிறேன்.
சீக்கிரம் சொல் என்கிறாய்.
இன்னும் கண்திறக்கவில்லை
நான்.
மூடிய உன் கரத்தை
என்னிரு கரங்களாய் பற்றிக்கொள்கிறேன்.
"உன் மூடிய கரத்தினுள் இருப்பது
எனக்கான நிம்மதி.
நான் யாசிக்கும் பேரன்பு.
நான் கண்ணீருகுத்தபின் தேம்பிச்சரியும் பொன்மடி
நான் வீழ்ந்தபோழ்து எனைத் தேற்றித் தலைகோதும் உன் கைவிரல்கள்
நான் அடங்காத பேரலையாய் தளும்பித் ததும்புகையில் எனைச் சேமிக்கும் பெண்தேக்கம்
நான் ஆழ்ந்து உறங்குகையில் என் கனவுகோதும் மயிலிறகு
நான் அரற்றிச்சிரிக்கையில் எனை அதட்டி வைக்கும் அன்னைமொழி
நான் நானாக மறுக்கையில் எனைத் திருப்பித் தரும் தேவவரம்
நான் நானாக மறுகுகையில் எனைப் பெருக்கித் தரும் போதிமரம்
நான் எல்லாமுமாகையில் எல்லாமுமாகும் இன்னொருவள்
நான் எதுவுமற்றிருந்தாலும் எல்லாமுமாகும் என்னொருவள்
மொத்தத்தில்
உன் கைரேகைப்படுகையில் ஓடிக்கொண்டிருக்கும்
காதல் நதி என்கிறேன்."
கரங்களை விலக்குகிறேன்.
உன் கரத்தைப் பிரிக்கிறாய்.
என்னிதழ் பதிக்கிறேன்.
பிறக்கையில் அது வியர்வை.
இனி அதற்கொரு பெயர்வை.
அது காதல்நதி.
No comments:
Post a Comment