Wednesday, 30 October 2013

46.
கிருஷ்ண மாயம் -3
--------------------------
காலையும் மாலையும்
உன் முகம் மறந்துபோகும்

காண்கின்ற பொழுதினில்
காலம் துவண்டு போகும்

ஐம்பூவும் யாப்பிலியும்
கர்மமென கண்டுசிரித்துவிட்டு

காதல் புரிவது மாயனே
உன் மாயமோகனமோ????

பூவிதழ்கள் குவிந்துகொண்டு
பூங்குழலில் உந்தும் ஓசை

இதயமில்லா காமுகனாய்
இம்சிக்கிறது இதயத்தினுள்

தத்தகிட தித்தகிட என
தத்தித்தாவும் உன் கால்

தண்டையில் தஞ்சம்புக
நாதமில்லையோ?? - எல்லாமுமற்ற

புன் சிரிப்பு இன்று உன்
புருவ அசைவினுள் கண்டுவிட்டேன்

கார்மேக விட்டல ரங்கா உன்
காலடியில் கிடக்க ஆசை...
மயிர்பீறி அசைவுபோல
மனப்பீறி அசைந்து பாடும்

மீராவாய் என்னை மாற்றிவிடாதே
மீண்டுண்ணா கடும்தவம் எய்தி

பொற்பாய சாபமிடுவேன்
மறுபிறவி வேண்டிக்கேட்டு

பெண்ணாய் நான் பிறக்க
என் சிசுவாய் நீ கிடைக்க

யசோதையாய் உன்னிடம்
யாசிக்கின்றேன் அருள்புரிவாய்

யாதும் தெரியா கள்வனைப்போல்
கள்ளச்சிரிப்பு காட்டாதே

கண் இமைக்கும் நேரத்தில்
கவர்ந்துவிடுவேன் உன் காதலினை 

No comments: