Wednesday, 30 October 2013

44.
ஆணாய் பிறந்ததினால்
அர்த்தம் இல்லாமல்
கவிதை புனைகிறேனோ??

பெண்ணாய் பிறந்திருந்தால்?
கவி எழுதும் வாய்ப்பிருந்தால்?!
என்ன எழுதியிருப்பேன்?!

அப்பாவின் அரவணைப்பின்
கதகதப்பும்,பட்டாடையினை
சுற்றாடவிட்டு வரும் மகிழ்ச்சியும்

நீண்ட கூந்தலின் இரகசியமும்
பருவமெய்திய வலியும்
காதல் அரும்பும் உணர்வுகளும்

அழகியலின் பொறாமையும்
பெண்ணியத்தின் தன்மையும்
காமுகர்களின் கொடுஞ்செயலையும்

விவாக முதல் நாளின்
விண்ணற்ற மகிழ்ச்சியையும்
முதல் ஆண் மகனின் ஸ்பரிசமும்

புதிய குடும்பத்தினரின் பழக்கங்களையும்
தாய் தந்தை அண்ணன் தம்பி தங்கைகளின்
பிரிந்து உயரா உணர்ச்சிகளையும்

கணவனின் அன்பும்,பண்பும்
பேருகாலத்தின் சுயத்தையும்
தாயாகிய மகிழ்ச்சியையும்

பால் குடிக்கும் பிள்ளையின்
இதழின் வருடலையும்
குழந்தைகளின் மழலைகளையும்

இன்னுமென்னவெல்லாம் உண்டோ
அத்துனையும் எழுதியிருப்பேன்
பாழாய் போன ஆணாய் பிறந்ததினால்

எதுவுமில்லை,சுவையுமில்லை,
சுமையுமில்லையென தீண்டாக்காதலையும்
உள் எழும் ஆசைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்


No comments: