Wednesday, 30 October 2013

72.
இரவு உண்ட மிச்ச கட்டுச்சோற்றை
ஓரம் கட்டிவிட்டு

ஒய்யாரமாக காலை ஆட்டி
மனதில் தோன்றிய

கவிதைகளை எல்லாம்
ஓலைச்சுவடியில்

ஓங்காரமாய் பதிவு செய்து
ஓய்வெடுத்து தூங்கி-பின்

அதிகாலை துயிலெழுந்து
ஆத்தங்கரை நீர் மூழ்கி

ஆசுவாசமாய் கொலைப்பசியுடன்
கட்டுச்சோற்றைத்திரந்தால்

கரப்பான் பூச்சிகளும்,கரிய எலிகளும்
வலியை போக்க அழகாய்

உண்கிறது மிச்சமிருந்த புளியோதரையை
தோள்துண்டை உதரிவிட்டு

தூவென துப்பி நடந்தான்
விளாசமில்லா விரதக் கவிஞன்

No comments: