Wednesday, 30 October 2013

48.
நான் அகந்தை மிக்கவன்....
நான்அதிகாரம் துறப்பவன்
நான் கடும் கோபம் இரைபவன்
நான் கவி கதைப்பவன்
நான் காதலிப்பவன்
நான் குழந்தையானவன்

இத்துனை நான் இருந்தும்
புல் மேயும் ஆடாய்
காமம் மேயும் உடலாய்
மட்டும் இருந்திருப்பேன்
நீ இல்லையெனில்
நம் காதல் இல்லையெனில்

சில பலரது படைப்பும்
உன்னையே இட்டிச்செல்கிறது
உன்னுள் என்னையே இடம்பெயர்கிறது
வலைப்பூவில் எழுதிய பலவும்
வருவாரற்று கிடந்ததினால்
கோபமும்,காதலும்.அகந்தையும்
அவற்றை அழித்திடச்செய்தது

பெற்ற பிள்ளையினை
போஜித்திட தாய்ப்பால் இல்லாத
தாயாய் கல்லாகிய மனதுடன்
துளியிரக்கம் ஏதுமின்றி
கொன்று புதைத்து
அடுத்த பிள்ளையை பெற்றெடுப்பதுபோல்

தன் இறந்த பிள்ளைக்கு கிட்டாத
பாலை பக்கத்துவீட்டு பிள்ளையாவது
பருகி வாழாத என ஏங்கும்
அபலைத்தாயாய் இதையும்
மனதோடு புணர்ந்துவிட்டு
மனம் புசிக்க விட்டுவிட்டேன்
தூக்கமில்லா துயிலினைத்தே

No comments: