Wednesday, 30 October 2013

40.
மரமும் நானும்
போட்டியிட்டு
விதைத்திருந்தோம்

அது தன் விதைகளையும்
நான் என் காதலையும்

விதைகள் வளர்ந்து
வேர்விட்டு துளிர்த்தன

செடியும் வளர்ந்து
கிளை பரப்பி

மொட்டு மலர்ந்து
பூவும் பூத்திருந்தது

உன் மனதில் என் காதல்
எழவே இல்லை

பணமென்னும்
உரமில்லாததால்

கடைசியில் அச்செடியிடம்
புலம்ப தன் முதல் மலரை

மகரந்த சேர்க்கைக்கு முன்னரே
உதிர்த்திருந்தது என் காதலின்
கல்லறையாகிய உன் இதையத்தில் </3

No comments: