Wednesday, 30 October 2013

49.
சில்லென்ற இளங்காலைப்பொழுதில்
சிறு சாரலாய் மேகமது மழைத்தூவ
மனதிலொரு பாடல் ரீங்காரமிட
மனம் லேசாய் வருடுகிறது.....

முற்பிறவி பயனும் பாவமும்
ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி
ஒரே சமயத்தில் முத்துக்களாய்
மனதில் குழப்பம் ஏற்படுத்த

மழையை ரசிக்கவா???
மனதிலுள்ள பாடலை ரசிக்கவா???
அருகில் இல்லா உன்னை ரசிக்கவா??? என
குழந்தையாய் உன் அருகில் வர

அரவணைத்து முத்தமும் தந்தாய்
இவை எல்லாம் மறந்து அம்முத்தத்தினை
இரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன் இதழ்களில்.... 

No comments: