17.
பிரசவ அறையினிலிருந்து
பிரவேசிக்கும் அந்த நெடியும்
வீல் என கூச்சலிட்டு
வெளிவரும் அந்த ஒலியும்
ரோஜா இதழின் ஸ்பரிசமும்
பால் மணம் பகிரும் தேகமும்
இமை மூடி பூஞ்சிரிப்புமாய்
பிறந்துவிட்டாள் என் தேவதை என
விழியோரம் வழிந்த கண்ணீரும்
கை குலுக்கி வாய் தினிக்கும் இனிப்பும்
எதுவும் ஏறவில்லை -உன் அழகை கண்டு
மயங்கிக்கிடந்த உன் அம்மாவின்
நெற்றியில் இட்ட முத்ததிடம் கேள்
என் மகிழ்ச்சி என்னவென்று அது சொல்லும்
தலை நிற்காமல் இருப்பாய் என்று
தலையோடு சேர்த்துப்பிடித்த முதல் நொடி தோன்றிய
உணர்வுகள் வடிக்க தமிழில் வார்த்தையில்லை...
பால் கிண்ணி எடுத்துக்கொண்டு
அழும் உன்னை அடிமடியில் படுக்கவைத்து
ஒற்றைக்காலின் ஓயாத அசைவும்
உன்னை உறங்க வைக்க நான் படும் பாடும்
என் தோளில் நம்மை மறந்து தூங்கிடும்
உன் அம்மாவின் உறக்கத்தில் கனவாய் வருகின்றதாம்
பிரவேசிக்கும் அந்த நெடியும்
வீல் என கூச்சலிட்டு
வெளிவரும் அந்த ஒலியும்
ரோஜா இதழின் ஸ்பரிசமும்
பால் மணம் பகிரும் தேகமும்
இமை மூடி பூஞ்சிரிப்புமாய்
பிறந்துவிட்டாள் என் தேவதை என
விழியோரம் வழிந்த கண்ணீரும்
கை குலுக்கி வாய் தினிக்கும் இனிப்பும்
எதுவும் ஏறவில்லை -உன் அழகை கண்டு
மயங்கிக்கிடந்த உன் அம்மாவின்
நெற்றியில் இட்ட முத்ததிடம் கேள்
என் மகிழ்ச்சி என்னவென்று அது சொல்லும்
தலை நிற்காமல் இருப்பாய் என்று
தலையோடு சேர்த்துப்பிடித்த முதல் நொடி தோன்றிய
உணர்வுகள் வடிக்க தமிழில் வார்த்தையில்லை...
பால் கிண்ணி எடுத்துக்கொண்டு
அழும் உன்னை அடிமடியில் படுக்கவைத்து
ஒற்றைக்காலின் ஓயாத அசைவும்
உன்னை உறங்க வைக்க நான் படும் பாடும்
என் தோளில் நம்மை மறந்து தூங்கிடும்
உன் அம்மாவின் உறக்கத்தில் கனவாய் வருகின்றதாம்
No comments:
Post a Comment