Saturday, 15 September 2012

கற்றது கசடு

இது சற்று விசித்திரமானதாக இருக்கலாம் ஆனால் நூறு சதவிகிதம் உண்மையானது.
இதை ஒரு தொடர்கதை போல எழுதாலாமென்றுள்ளேன்...

சிறு வயதில் எல்லோருக்கும் இவ்வகை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும..
ஆம் நம் பெற்றோரே இவனிடம் பழகாதே,இக்குடும்பம்,
இச்சாதியினரிடம் பழகாதே எனக்கூறுவது இன்றுவரை தொடர்கிறது
அதுவும் பார்ப்பன குடும்பத்தில் பிறந்த என்னைப்போன்றவர்களுக்கு அதிகமுண்டு..

ஆனால் எனது வாழ்க்கையில் சற்று விசித்திரமாக நிகழ்ந்துள்ளது
என் அம்மா சுகாதாரச்செவிலியர் இங்கு ஆரம்பிக்கிறது முரண்...

''ஜாதிகள் இல்லையடி பாப்பா குல உயர்ச்சி,தாழ்ச்சி சொல்லுதல் பாவம்''
என்ற முண்டாசுக்கவிஞனை கண் முன் காட்டுபவர் ஆயினும் அவரது பிள்ளையாகிய நான் என் சாதி பிள்ளைகளுடனும் சற்று சாந்தமாக இருக்கும் ஜாதிப்பிள்ளைகளிடத்தில் மட்டுமே சேர வேண்டும் என கூறுபவர் என்னடா இடிக்கிறதென்று தோன்றுதா?? அதற்கான காரணம்
தொடரும் பதிவுகளில்....

சரி விசயத்திற்கு வருவோம் அம்மாவின் வேலை காரணமாக இந்திய தேசத்தின் கடைக்கோடி
மக்களின் வாழ்வை சிறுவயதிலேயே படிக்கும் பாக்கியசாலி நான்...

எழுத ஆரம்பித்தவுடன் ஒரு அதிர்ச்சி முரண் தரவேண்டாமா???

இதோ உங்களுக்காக ஒரு நிகழ்வு...

4 வகுப்பு முழு ஆண்டு விடுமுறை சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்ட நேரம் அம்மாவின்
ஹெர்குளீஸ் லேடி பேர்ட் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்ற மேல் சாதி நண்பர்களுடன்
ஊர் சுற்ற கிளம்பியாயிற்று மொத்தம் 12 பேர் என்னையும் சேர்த்து..
எங்களூரில் சாதிவாரியாகதான் தெருக்கள் இருக்கும்..
கிராமத்தில் (பார்பன தெரு) தொடங்கி மூப்பனார்,செட்டியார்,வேளார் தெரு வழியாக
நாடார் தெருவைத்தொட்டு அங்கிருக்கும் நல்லி (குடிநீர் குழா)யில்  தாக சாந்தி செய்து  அடுத்த தெருவான பச்சேரி (அரிஜன தெரு)க்கு வண்டியை அழுத்தினால் சிலர் நாங்கள் வரவில்லை என்றுரைத்தனர் அவ்வாரே அந்த தெருக்களை கடந்து மற்றொரு தெருவிற்குள் நுழைந்தால் அங்கு மீண்டும் தாகமெடுத்தது அங்கு தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டால் அம்பி நீங்களாம் இங்க தண்ணி குடிக்க கூடாது என்று கூறினார் முகத்திலடித்தார் போன்றிருந்தது...பார்பன்னாக ஏன் பிறந்தேன் ?? என்ற கேள்வி எழுந்தது...விடை தேடும் படலம் அன்று தொடங்கி இன்று வேறொரு பரிணாமத்தில் பயணிக்கிறது....அவற்றை கூறினால் எவ்வளவு மக்கள் ஏற்பார்களென்று தெரியவில்லை....ஹம்......பார்க்கலாம்....

கசடுகள் தொடரும்.....

2 comments:

கேரளாக்காரன் said...

//4 வகுப்பு முழு ஆண்டு விடுமுறை சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்ட நேரம் //

எனக்கெல்லாம் இப்போ வர சைக்கிள் ஓட்ட தெரியாது பாஸ்

கேரளாக்காரன் said...

please remove word verification in comment box