Wednesday, 5 June 2013

கடைசி மூன்று தினம்

சற்றும் பால்மனம் மாறாத குணம்
வயதை மீறிய தோற்றம்
மெதுவாய் வளரும் அவயம்
கையில் பையுடன் கடைக்குச்செல்ல

வயதை மீறிய ஆபாசத்துடன்
வயதில் புரியா குழந்தையை
நோக்கும் மாந்தர் நடுவே
கையாட்டி செல்கின்றாள்

காய்கறி வாங்கிவிட்டு
கையில் மிச்சமும்
சாக்லேட்டும் வைத்துக்கொண்டு
வீதியில் நடக்கையிலே

விசித்திர வலி அடிவயிற்றினுள்
வாட்டி வதைக்க பெண்ணியத்தின்
பெருஞ்சிறப்பாய் பொறுமையினை
இடற்பேன நடை ஓட்டமாக

புறாக்கூண்டின் பெரிய வகையாம்
அப்பார்ட்மெண்டெனும் கூடுகளில்
படியேறி..வீட்டின் அழைப்பு மணி
அடிக்கும் பொழுதும் விழாமல் இருக்கின்றன

அவள் வாங்கிய சாக்லேட்டுகள்
வலி அதிகரிக்க அம்மா என்று அலறி
பொத்தென சோபாவில் விழ
அடுக்குளையிலிருந்து வெளிப்பட்டாள்

பார்த்தவுடன் புரிந்துவிட்டது
பக்கத்துவீட்டு பரிமளா மாமியும்
வர வீட்டின் மூலையில்
அமர்த்தப்பட்டாள் வலிநிவாரணியுடன்

அடுத்தடுத்து பல கட்டளைகள்,
பல கொஞ்சல்கள்,அறிவுரைகளென
எதுவும் புரியாமல் நிக்கத்தவளாய்
கையில் சாக்லேட்டுடன்

டெடியுடன் விளையாடுகின்றாள்
அழைப்புமணி அடிக்க அப்பாவும் வர
எழக்கூட மணமில்லாமல் வலியில்
துடித்தவளிடம்

தம்பி சென்று கேட்டான் ''என்ன
ஆயிற்று??'' அருகில் சென்றவனை
அவள் பெறியமனுஷி ஆயிட்டாள்
பக்கம் போகாதே என

கத்திய அம்மாவை விசித்திரமாய்
பார்த்தனர் அக்காளும் தம்பியும்
கையில் சாக்லேட்டுடன்
இனி மாதம் தோறும்

அவளின் வாழ்வில் கடைசி மூன்று
நாட்கள் தான் வலியுடன் கூடிய
மனித நாகரீகத்தில்

No comments: