Wednesday, 5 June 2013

மழைக்குஞ்சு


இருக்கமான பட்டாடையுடன்
மறுதலித்து மாமன் மடியில்
விளையாடிய பிஞ்சிற்கு
காதணி விழாவாம்

கொங்கை மனம் மகிழ-அவனை
எடுத்து வினவ..விசித்திரமாய்
கேட்கின்றான் கதை
ஒன்றை

வாயில் வாழைப்பழம் தினிக்க
வலியுடன் வாட
மாமனும் அப்பனும்
மாறி மாறி பிடிக்கின்றனர்

வெளியிலே கடும் காற்று
மேகம் சூழ அனைவரும்
உண்டு தனிக்க குல
சாமிக்கு பொங்கல் படைத்து

இவனை மட்டும் விட்டு விட்டனர்
இளம் கொங்கையிடம்
கான மயிலாய் அவள்
இடையில் நடனமாட

விளையாடு என விரித்த
பாயில் விட்டுவிட்டாள்
கரும் மேகம் போர்வையாய்
சுற்றிவர பாயின் விளிம்பில்

ஊரும் எறும்பை பிடிக்க
தவழ்ந்து நடக்க மழைக்குஞ்சினை
இவனது காதில்
தடவியது கரிய மேகம்

No comments: