Monday, 23 December 2013

வசை பாடிகள்

 ஒரு சொல்
  ஒரு வரி
  ஒரு கட்டுரை
 எவை வேண்டும் என்றாலும்
 நம்மை தாக்கலாம்...

 நம் எதிரிகளிடமிருந்தோ,
 நண்பர்களிடமிருந்தோ ,
 உறவுகளிடமிருந்தோ
 யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம்..

 இவ்வசை பாடிகள்
 ஓங்கி  உயர்ந்த
 மரத்தின் இளந்துளிர் போல்
 எண்ணற்ற பசுமையை சுமந்து
 மெதுவாய் செதுக்குவர் - நம்
 மனம் கீறும் வசைகளை..

 பருவம் எய்திய ஆண் குரங்கைப் போல்
 எங்கும் அலைந்து திரியும் அவர்களின்
 வசை பாடல்கள்..

 இலக்கற்ற சிறகாய் காற்றில்
 பறந்து வந்து உங்களை வதைக்கும் முன்
 வேர் அறுத்து விடுங்கள் அவ்வசை பாடல்களை...

No comments: