அருகிலிருக்கும் ஷாப்பிங் மாலில் சுற்றிவிட்டு ஐந்தாம் மாடியிலிருந்து மின்தூக்கியில் இறங்கி கொண்டிருந்தேன்...
கையில் அலைபேசி.....விருவிறுப்பாக சாக்கர் விளையாடிக்கொண்டிருந்தேன்...
மின் தூக்கி தரையிறங்கியவுடன்....வேகமாக வெளியேறினேன் முன்னிருப்பவரை பாராமல்....சிறிய இடம் அருகில் சில பெட்டிகள் வேறு அவளின் பின்னால் இருந்திருக்கிறது ...எனது வேகத்தில் அவளும் பின் செல்ல
அவளை சுவற்றோடு அடைத்தாற்போல் நான் நிற்கிறேன்....என் கைகள் சாக்கரில் கோல் அடிப்பதில் குறியாய் இருக்க....
எனக்கும் அவளுக்குமான இடைவெளி குறைவு....எனது கண்கள் எங்கள் உதட்டின் இடைவெளியை அளந்து கொண்டிருந்தது....'3 IDIOT ' படத்தில் அமீர் கானுக்கு வந்த சந்தேகம் எனக்கு தெளிவாயிற்று....ஆம் என் நாசியும் அவளது நாசியும் உரசிக்கொண்டிருந்தது...
இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை....அவளது கூந்தல் மயிர் என் கண்ணத்தில் உரச அந்த விநாடி ஏதோ மாய உலகில் பயணித்தேன்...
மொத்தம் 30 விநாடிகள் கூட இருக்காது நாங்கள் அருகில் நின்ற நேரம்...அதற்குள் ஆயிரம் சலனங்கள்...அவளின் மனவோட்டம் அறியேன்...நிலைமையை சுதாரித்து ''சாரி'' என்ற வார்த்தையை வாயிலிருந்து
விடுத்து பின்னே பாராமல் நடந்தேன் மீண்டும் சாக்கரில் மூழ்கி....
சில கேள்விகள்.....சில வருத்தங்கள் என் தோழியிடம் கேட்டும் பதில் கிடைக்க வில்லை....
வருத்தம்
1) அவளது இதழின் சுவை தெரியாமல் போயிற்றே!
2)கடைசிவரை அவளின் முகம் பார்க்கவில்லை
கேள்வி
1) அந்த 30 விநாடியும் நான் அவளின் மூச்சுகாற்றை உணரவில்லை...அது ஏன்?
2)அவளின் மனநிலை என்னவாயிருந்திருக்கும்??
3)அவளும் என்னை மட்டமாக நினைத்திருப்பாலோ??
4)அவளும் இவ்வாறு என் முகம் பாராமல் இப்படி புலம்பியிருப்பாலோ???
No comments:
Post a Comment